பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், டிசம்பர் 23

மிகபெரும் திட்டத்துடன் களமிறங்குவார்கள் போலிருக்கின்றது

அரசு அனுமதி மறுத்தும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இன்று திமுக பெரும் திட்டத்தோடு களமிறங்குகின்றது
அமைதியான எதிர்ப்பு என்றால் அவர்கள் ஏதும் செய்யட்டும் ஆனால் வன்முறைக்கு அஞ்சுவோர் வீட்டில் இருங்கள் என வருங்கால தலமையே சவால்விட்டு வரும்பொழுது எச்சரிக்கை தேவை
மிகபெரும் திட்டத்துடன் களமிறங்குவார்கள் போலிருக்கின்றது
இச்சட்டம் இந்நாட்டு மக்களுக்கு எதிரானது அல்ல என நிரூபிக்கபட்ட பின்பும், அரசு போதிய விளக்கம் கொடுத்தபின்பும் , ஒரு இந்தியனும் பாதிக்கபடா நிலையிலும் வீண் போராட்டம் என கிளம்புவது வடிகட்டிய அயோக்கியதனம்
இஸ்லாமியர் கொஞ்சம் கவனமாக இதை அணுகலாம், எக்காரணம் கொண்டும் திமுகவினருக்கு உயர் பதவியோ அமைச்சர்பதவியோ அவர்கள் கொடுக்கபோவதில்லை, காலத்துக்கு ஏற்றபடி பயன்படுத்துவார்கள்
இதனால் இஸ்லாமிய சமூகம் கவனமாய் இருத்தல் நலம், காரணம் வன்முறை ஏற்பட்டு ஒரு இஸ்லாமியனுக்கு ஏது நடந்தாலும் அதை மதகலவரமாக மாற்றுவார்கள்
இந்துக்கள் இன்னும் எச்சரிக்கையாக இருத்தல் நலம், இப்பொழுதும் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லிவிட்டுத்தான் வீதிக்கு வருகின்றது திமுக , இந்து பண்டிகை என்றால் விடுமுறை வாழ்த்து
ஆக தமிழக மக்கள் திமுகவின் வெட்டி அரசியலையும் வீண் போராட்டத்தை கணக்கில் கொண்டு இந்நாட்டுக்கான அமைதியினையும் வளப்பத்தையும் வளர்க்க என்ன‌ செய்ய வேண்டுமோ அதை செய்யட்டும்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக