பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜனவரி 17

கால்டு வெல் சிலையை உடைத்து கடலில் எறிவோம்

 மகா அருவெறுப்பாய்தான் இருக்கிறது...மிஷினரிகள் தங்களின் கயவாலிதங்களை கருணாநிதி போன்ற வந்தேறி நயவஞ்சகர்கள் மூலமாகவே நடத்திக்கொண்டுள்ளனர். தமிழையும், அவர்தம் பண்பாட்டையும் , அவர்தம் சமையங்களையும் அழிக்க இங்கே வந்த இந்த பயலுக்கு கடற்கரையில் சிலைவைத்த கொடுமதியாளர்கள். கால்டு வெல் சிலையை உடைத்து அகற்றுவதே தமிழர்களுக்கு மரியாதையான செயல். வரும் கால இளைஞர்கள் செய்வார்கள்.

வரிக்கு வரி உங்களது தார்மீக கோபம் வெளிப்படுகிறது. அரிசி பற்றியும் தாமிரபரணி நதியைப் பற்றியும் ஒரு வெளிநாட்டு கால்டுவெல் வந்துதான் இங்கே நமக்கு பாடம் எடுக்க வேண்டுமா? தலையெழுத்து. நமது வரலாறுகளை யாரும் மாற்றிவிட முடியாது. நமது வரலாறுகளை வெளிநாட்டான் எழுதுவது தான் கொடுமை.




Favorites t1Spo0anshuSoured 
திருநெல்வேலி வரலாறு என கால்டுவெல் எழுதிய புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன்
கால்டுவெல்லுக்கு திருநெல்வேலி வரலாறே 1500ம் ஆண்டில்தான் தொடங்குகின்றது அதற்கு முன் திருநெல்வேலி எனும் ஒரு ஊர் இருந்தததாகவும் தாமிரபரணி என ஒரு நதி ஓடியதாகவும் அவர் சொல்லவே இல்லை
அன்னாரின் "திராவிட" ஆராய்ச்சியின் முடிவு இப்படி செல்கின்றது
நெல்லையப்பர் கோவிலில் சிவன் நெல்லுக்கு வேலியிட்டது கட்டுகதையாம், அரிசி என்றால் உமியோடு சேர்ந்தது என வராதாம், மூங்கிலில் இருந்து வருவதுதான் அரிசியாம், தாமிரபரணி கரையில் நெல் விளையாமல் மூங்கில் அரிசியில்தான் பசியாரினார்களாம்
நாயன்மார் கதை எல்லாம் கட்டுகதையாம், இந்துக்களின் நம்பிக்கையெல்லாம் கட்டுகதையாம். அதே நேரம் அவர் பரப்ப வந்த கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி கேள்வி கேட்கவே கூடாதாம்
அவரின் வரலாறு முழுக்க கிரேக்கன் வந்தான், ஆப்கானியன் வந்தான், நாயக்கன் வந்தான், அப்படிபட்ட தமிழகத்தில் பிரிட்டானியர் ஏன் வரகூடாது என்ற ரீதியில்தான் செல்கின்றது
பாண்டிய வம்சத்தை அவன் மகாபாரததோடு தொடர்புபடுத்தாமல் கிரேக்க புராணங்களோடு தொடர்புபடுத்தும் பொழுது அப்படியே புத்தகத்தால் அவன் மண்டையில் அடிக்க வேண்டும் போல் கோபம் எழுகின்றது
முதுமக்கள் தாழியின் எலும்புகளை கண்டு இது இந்துக்கள் இல்லை என சொல்கின்றான் கால்டுவெல், எந்த இந்து இந்து அடையாளத்தோடு புதைக்கபடுவான் என்பதுதான் தெரியவில்லை, 300 வருட கிறிஸ்தவன் கல்லறையினை தோண்டினால் அவன் பைபிளோடு படுத்திருப்பானோ என்னவோ?
அன்னாரின் ஆய்வில் ஒரு இடத்திலும் பிரமாண்டமான நெல்லை ஆலயம் பற்றியோ, குற்றால நாதர், தென்காசி கோவில் பற்றி சிறுகுறிப்புமில்லை
அக்கோவில்களின் மிகபரந்த பரப்பளவு அது கட்ட செதுக்கபட்ட கற்கள், அங்கு நிற்கும் பிரமாண்ட தேர் இது பற்றியெல்லாம் குறிப்ப்பே இல்லை, அந்த அளவு அவர் எரிச்சல் அடைந்திருக்கின்றார்
அன்னாரின் ஆய்வு திருவிதாங்கூர் சமஸ்தானம் வரை செல்கின்றது, அங்கு அய்யா வைகுண்டர் தலமையில் நடந்த போராட்டத்தை, அதாவது அய்யா எனும் நாராயணின் அவதாரத்தை மறைத்து "மக்கள் கிளர்ச்சி" என மாற்றி வைக்கின்றான் கால்டுவெல்
மக்கள் ஏன் கிளர்ந்தார்கள் என்பது பற்றி அவன் ஒன்றும் சொல்லவில்லை, வஞ்சகம் என்றால் இதுதான், இதன் பெயர் சமத்துவ கிறிஸ்தவம் உண்மை பேசும் கிறிஸ்தவம்
நெல்லையின் பிரமாண்ட ஆனிதிருவிழா, மதுரையின் சித்திரை திருவிழா உள்ளிட்ட ஒரு குறிப்பும் காணோம் , திருசெந்தூர் ஆலயம் பற்றியோ அங்கு நடந்த சூரசம்ஹாரம் பற்றியோ கொஞ்சமும் தகவலே இல்லை
ஆனால் வரிக்கு வரி பிரான்ஸிஸ் சேவியர் எனும் மிஷனரி, இயேசுசபை இன்னும் ஏகபட்ட சபைகளை சொல்லமுடிகின்றது
தஞ்சாவூர்காரியான அலமேலுவினை , இளம்பிராமண விதவையான அலமேலுவினை மணம் செய்த வெள்ளையன் கதை வஞ்சகமாக திரிக்கபட்டிருக்கின்றது
ஆம் அந்த அலமேலு தஞ்சாவூர் பிராமணத்தி ஆனால் பெரும் செல்வசெழிப்புமிக்க குடும்பம் அவளுடையது வைரநகை மட்டும் அணிந்திருப்பாள்
அவள் மதம்மாறினால் மணம் செய்யலாம் என ஆசைகாட்டபட்டு ஒருவெள்ளையனால் மதம்மாற்றபடுகின்றாள், ஆனால் அவனுக்கும் குடும்பம் இருந்தது
கிறிஸ்தவ முறைபடி திருமணம் ஆன ஒருவன் இரண்டாம் திருமணம் சட்டபடி செய்யமுடியாது என்பதால் அவர்கள் கமலஹாசன் பாணியில் குடும்பமாகவும் வெளியில் போதகர்களாகவும் வலம் வந்தனர்
தஞ்சாவூர் பக்கம் இது சர்ச்சையானதால் அம்மணியும் அவரின் துணைவனும் பாளையங்கோட்டை பக்கம் வந்து "ஊழியம்" செய்து, ஏராளமான ஜனங்களை கர்த்தரிடம் சேர்த்தனர்
ஒரு கட்டத்தில் அந்த வெள்ளை கமலஹாசனும் செத்துவிட இரண்டாம் முறையாக விதவையாகும் அலமேலுவுக்கு மனம் உடைகின்றது ஆனால் திரும்பி செல்லமுடியா வலை கிறிஸ்துவத்தால் விதிக்கபடுகின்றது
குளோரிந்தா என பெயரை மாற்றிகொண்டு பாளையங்கோட்டையிலே வாழ்ந்து மரித்தாள் அம்மணி, அவளின் கோடான கோடி சொத்து சபைக்கு சென்றது
அவள் பிராமண பணக்காரியாக இல்லையென்றால் கிறிஸ்தவம் ஏற்றிருக்குமா? ஏற்றிருந்தாலும் லிவ்விங் டுகேதர் வாழ்வினை அங்கீகரித்திருக்குமா என்பதெல்லாம் தலைசுற்றும் விஷயம்
அந்த குளோரிந்தாவினை மதர் தெரசா அளவுக்கு சொன்ன கால்டுவெல்லுக்கு நெல்லையப்பர் ஆலயம் பற்றி சொல்ல வாய்வரவில்லை என்பதுதான் மிஷனரிகளின் பொல்லாத மனம்
சரி, அவன் தமிழ்படித்தது இருக்கட்டும் ஆனால் தமிழக ஊர்களுக்கு அவன் வைத்த பெயர் என்ன தெரியுமா?
வாஷிடே நல்லூர் அதாவது வாசு தேவ நல்லூர்
கோமரின் அதாவது கன்னியாகுமரி, டூட்டுகொரின் அதாவது தூத்துகுடி
இப்படி தமிழே சரியாக தெரியாதவன் திருநெல்வெலி வரலாற்றை எழுதினானாம் , அவனுக்கு இங்கு சிலையாம் கொண்டாட்டமாம்
தமிழகம் எவ்வளவு மட்டமாக மிஷனரிகள் கையில் சிக்கி இருக்கின்றது என்பதற்கு கருணாநிதியும் திராவிட கூட்டமும் கொண்டாடிய கால்டுவெல் மிகபெரிய சாட்சி
கால்டுவெல் செய்தது என்னவென்றால் அவன் வரும்பொழுது இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் அவர்கள் எழுதிவைத்த நாள்குறிப்பினை படித்திருக்கின்றான், அதை ஒரு காப்பியாக எழுதி வைத்து திருநெல்வேலி வரலாறு என சொல்லியும் விட்டான்
ஆம் அவன் கணக்குபடி திருநெல்வேலிக்கு வரலாறு வெறும் 300 வருடமே, இதை அங்கீகரித்தவர் தமிழனத்தை காக்க வந்த முத்தமிழ் அறிஞர் கருணாநிதி
ஒரு காலம் வரும் அன்று கால்டுவெல்லும் அவனின் மதவெறி பிடித்த புத்தகமும் கடலில் வீசபடும், அது நிச்சயம் நடக்கும்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக