பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மார்ச் 7

The Shameless , oblique North Indian Medias!

The Shameless , oblique North Indian Medias!

 துணியை வழித்துக்கொண்டு கதறும் வடக்கத்திய ஊடகங்களே!




அமெரிக்காவில் சீக்கியர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யபட்டாராம் . எல்லா ஆங்கில தொலைக்காட்சி நாதாரி நாய்களும் இந்த செய்தியிகளை "ஐயோ ஐயோ ' என கதறிக்கொண்டு தங்கள் செய்திகளில் தொடர்ந்து காட்டிக்கொண்டுள்ளனர்.  நீங்கள் எல்லாம் உப்பிட்டுத்தான் ரொட்டியும் சப்ஜியும் தின்னுகிரீகளா பாவிகளே! மன சாட்சி என்று சிறிது கூடவா அற்றுப்போனது உங்களுக்கு ?

சர்தார்ஜிக்கள் தாக்கப்படுவதில் உடன் பாடு இல்லை. அவர்களும் இந்தியர்களே. எங்களின் மறுப்பை தெரிவிக்கிறோம். அவர்கள் அங்கு பிழைக்க சென்றவர்கள். இந்தியர்கள். அவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் எங்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கும் செய்திகள்தான். 

ஆனால் இதைவிட கொடுமைகள் இங்கு, இந்திய, தமிழ் நாட்டு கடல் எல்லைகளில் நடந்தேறியதே அப்போதெல்லாம் உங்களின் வாயில் என்ன இருந்தது ?   ஏன் தமிழக மீனவர்கள் இந்தியர் இல்லையா? தமிழர்கள் இந்தியர் இல்லையா?? அப்போதெல்லாம் ஒன்றுமே நடவாதது போல இருந்த நீங்கள் இன்று மட்டும் ஏன் சீக்கியர்கள் அமெரிக்காவில் தாக்கப்படும் பொது மட்டும் அலறி அடித்துக்கொண்டு புடைதுகொண்டு எழுகிறீர்கள். தொடர்ந்து கதறுகிரீர்கள் .இந்திய பிரதமர் ஒரு சீக்கியர் என்பதாலா? இந்திய தமிழக கடலோர காவல் படைகள் எல்லாம் செயலற்று போனதோ? இல்லை சுயநல ஆட்சியாளர்கள் சொல்லிவைத்தார்களா தமிழக மீனவர்களை கண்டுகொள்ளாதீர்கள் என்று?  பண கொழிக்கும் சுய நல அரசியல் ஆட்சியாளர்கள் உங்களுக்கு ஜாடை காட்டினார்களா அவர்களின் செய்திகளை வெளியிடாதீர்கள் என்று? 

அப்போதெல்லாம் கண்டும்கானது இருந்த இந்த வடக்கத்திய நாதாரி ஊடகங்கள் இன்று இந்த சர்தாரிக்களுக்காக கதறும் காட்சி கண்டே இதனை எழுதுகிறேன். வடக்கத்திய ஊடகங்களை அனைத்தும் நாம் நிராகரிக்க வேண்டும் அவர்களை எதிர்க்கவேண்டும். அவர்களின் ஒளிபரப்பை இங்கு தடை செய்ய வேண்டும். வெட்கமும் மானமும்,நாணயமும் அற்ற மீடியாகளே ஒழிந்து போங்கள்.


என இங்கு சொல்லிய, சொல்லப்படாத அணைத்து கும்பல்களும் இந்த விஷயத்தில் ஒன்றுதான்.  இந்தி சினிமா காரிகள் போடும் பாண்டீஸ் நிறம் பற்றி ஆராய்ச்சி செய்து செய்தி வெளியிடும் மானம் கெட்டTime of India  போன்ற செய்தி நிறுவங்களை தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும்.





31 comments:

RVS சொன்னது…

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன் மாணிக்கம்...

தமிழ் உதயம் சொன்னது…

நீங்கள் சொல்வது சரி. ஆனால் பேச வேண்டியவர்களே (தமிழக அரசியல் தலைவர்களே) இப்படி இருந்தால், அவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்த மீடியாக்கள் அனைத்தும் நிச்சயமாக துரத்தப்பட வேண்டியவர்களே.....! எப்போ பார்த்தாலும், பாலிவுட் பாலிவுட், கிரிக்கெட், கிரிக்கெட், சே.. நாட்ல மத்தவன்லாம் வாழலையா? நாதாரிங்க.... !

டக்கால்டி சொன்னது…

cool down boss.இது இன்னைக்கு நேத்தா நடக்குது?

நிரூபன் சொன்னது…

எந்த,யாருடைய....................தை வைதுக்கொண்டிருந்தீர்கள்? சுவைதுக்கொண்டிருந்தீர்கள் ?? ஏன் தமிழக மீனவர்கள் இந்தியர் இல்லையா? தமிழர்கள் இந்தியர் இல்லையா?? அப்போதெல்லாம் ஒன்றுமே நடவாதது போல இருந்த நீங்கள் இன்று மட்டும் ஏன் சீக்கியர்கள் அமெரிக்காவில் தாக்கப்படும் பொது மட்டும் அலறி அடித்துக்கொண்டு புடைதுகொண்டு எழுகிறீர்கள். //

வணக்கம் சகோதரம், ஊடகங்களில் புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் உங்களின் கருத்தினை வரவேற்கிறேன். ஆனால் இந்த ஊடகங்களை இயக்குவது யாரு? ஆட்சியில் உள்ளவர்கள் தானே? அப்படியென்றால் ஆட்சியில் உள்ளவர்கள் மீனவர் படுகொலை பற்றி கவனம் செலுத்தினால் தானே அந்த மன்னர்களால் நடாத்தப்படும் ஊடகங்களும் தாக்கப்படும் மக்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்.
கலைஞர் ரீவி கூட அடுத்த பாராட்டு விழா நடன நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப காத்துக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மை செத்தால் போராட்டம்,
சிறுபான்மை செத்தால் நாடகம்
இது தான் இந்த ஊடகங்களின் செயற்பாடு!
இதற்கெல்லாம் ஒரே வழி?
இந்த ஊடகங்களை நாங்களே கையிலெடுக்க வேண்டும். இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக இவ் ஊடகங்களின், மீடியாக்களின் கண்ணை திறக்க பாடுபட வேண்டும்.

செங்கோவி சொன்னது…

அண்ணே..செம சூடு..!

மதுரை சரவணன் சொன்னது…

sema hot matchchi.. i too with u

எஸ்.கே சொன்னது…

பொறுப்பாக செயல்பட வேண்டிய மீடியாக்கள் இப்படி நடப்பது வேதனை!

Chitra சொன்னது…

தமிழ் பேசுவதை பெருமையாக நினைப்பது இல்லை. தமிழன் என்று தலை நிமிர்ந்து நிற்பதில்லை.... திடீர் என்று தமிழர் என்று ஒன்று பட சொன்னால், எப்படி முடியும்?

வேலன். சொன்னது…

தமிழர் என்றால் காலை வாருவதில்தான் முக்கியமானதாக கருதுகின்றார்கள்.மற்ற மாநிலத்தாரிடம் இருக்கும் ஒற்றுமை நமது தமிழருக்கு இல்லை..பார்க்கலாம் இனியாவது ஒன்றுபடுகின்றார்களா என்று..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown சொன்னது…

தலைவரே உங்கள் கருத்துகளில் சத்தியம் தெறிக்கின்றது............
பகிர்வுக்கு நன்றி

settaikkaran சொன்னது…

இதைத்தான் ஆண்டாண்டு காலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோமே? இவர்களது அலட்சியப்போக்கைப் பார்த்து கொந்தளிப்பதைத் தவிர நம்மால் ஆனது எதுவுமில்லை என்பதைப் புரிந்தே தொடர்ந்து இப்படி இருந்து தொலைக்கிறார்களோ?

எல் கே சொன்னது…

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்

சக்தி கல்வி மையம் சொன்னது…

நீங்க சொல்லுரது உண்மை... சாட்டையடி பதிவு..

இருவர் சொன்னது…

உங்கள் உணர்வு அனைத்து இந்தியர்களுக்கும் வரவேண்டிய உணர்வு சார்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தமிழன் தமிழ்ல தானே டைட்டில் வைக்கனும்? ஹி ஹி இருங்க மேட்டரை படிச்சுட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஏன்னா தமிழன் தானே இளிச்சவாயன்?

ஆனந்தி.. சொன்னது…

அண்ணா...நிருபன் சொல்வதிலும் ஓரளவு ஞாயம் இருக்கு தானே...ஊடகங்களின் கட்டுப்பாடு அரசாங்கத்தை சேர்ந்தது தானே..வடநாட்டு ஊடகங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்...நம் தமிழ் தொலைக்காட்ச்சியில் மீனவர் பிரச்சனைகளுக்காக என்ன பங்களிப்பு செஞ்சாங்க அண்ணா?? ஒரு நாள் சன் டிவி யிலும்,கலைஞர் டிவி யிலும் துக்கம் அனுஷ்டித்திருகலாமே(எல்லா நிகழ்ச்சிகளையும்ம் கட் பண்ணி விட்டு..) ஆனால் பண்ண மாட்டங்க...காரணம் sponser போயிரும்...அண்ணா..ஊடகங்கள் பெரும்பாலும் கம்மேர்சியல் ஆ இயங்கிட்டு இருக்கு இந்த நாளில்...வடநாட்டு ஊடகங்களை ஓரமாய் வச்சிட்டு..நம்ம ஊரு ஊடகம் என்ன பண்ணினாங்கன்னு யோசிப்பது தான் மில்லியன் டாலர் கேள்வி அண்ணா.....

Unknown சொன்னது…

அங்கேயும் சர்தார் செத்தால் சர்தார்தான் அழுதாகணும். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு இனமும் இல்லை. அவர்களிடமும் ஒற்றுமையும் இல்லை. ஆனால் ஊடகங்கள் அது வட இந்தியாவோ அல்லது தென் இந்தியாவோ பல லாப நஷ்டங்களை கூட்டிகழித்து பார்த்துதான் எழுதுகிறது.
மேலும் நீங்கள் நல்ல பதிவுலக நண்பர்களையெல்லாம் கொண்டவர்கள் ஆதலால் நீங்களும் ( நடந்தேறியதே அப்போதெல்லாம் உங்களின் வாயில் எந்த,யாருடைய....................தை வைதுக்கொண்டிருந்தீர்கள்? சுவைதுக்கொண்டிருந்தீர்கள் ?? ) நீங்கள் இந்த அளவுக்கு செல்லவேண்டாமே. கோபம் நியாயமானதுதான் மாற்றுகருத்து எனக்கில்லை. மனதில் பட்டதை சொல்லிவிட்டேன் அவ்வளவுதான்.

பொன் மாலை பொழுது சொன்னது…

@ Kr.விஜயன்.
உண்மையில் அப்படியெல்லாம் எழுதவே எனக்கு மனமில்லை. ஆனால்( கையாலாகாத )
ஆத்திரத்தில் எழுதிவிட்டேன். தங்களின் பின்னூட்டம் பார்த்ததும் அவகளை அகற்றி விட்டேன்.
நன்றி விஜயன்.

டக்கால்டி சொன்னது…

உண்மையில் அப்படியெல்லாம் எழுதவே எனக்கு மனமில்லை. ஆனால்( கையாலாகாத )
ஆத்திரத்தில் எழுதிவிட்டேன். தங்களின் பின்னூட்டம் பார்த்ததும் அவகளை அகற்றி விட்டேன்.
நன்றி விஜயன்.//

சபாஷு

Murugavel சொன்னது…

தமிழக மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக‌, மற்றொரு எகிப்து போரட்டத்தை துவங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை,

கி. முருகவேல்
அபுதாபி

ஆனந்தி.. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஆனந்தி.. சொன்னது…

நன்றி அண்ணா...எனக்கும் அந்த வரிகள் பார்த்து என்னவோ போலே இருந்தது...பட் இது பற்றி உங்க கிட்டே சொல்லவும் தயக்கமா இருந்தது...விஜயன் அண்ணா !..கக்கு அண்ணாவிடம் சொன்னதுக்கு நன்றி...

vasan சொன்னது…

தமிழ‌ர் பிர‌ச்ச‌ன‌க்கு, ந‌ம் த‌மிழ‌க ம‌க்க‌ளும், நாம் தேர்ந்தெடுத்த‌ த‌லைவ‌ர்க‌ளும், ந‌ம் த‌மிழ் செய்தி ப‌த்திரிக்கைக‌ளும்,த‌மிழ் தொல‌காட்சிக‌ளும் வாய்திற‌க்காத‌ போது, வேற்று மொழி தொலைக்ககாட்சியின‌ரை குறை சொல்ல‌ என்ன‌ இருக்கிற‌து.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த கோபம எனக்கும் உண்டு. இது இன்று நேற்றல்ல காலம் காலமாக நடந்து வரும் அநியாயம்.
ஒரே ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்கள். நமது பாட புத்தகத்தில் வரலாறு புக்கில் அனைத்து வட இந்திய மன்னர்கள், போராட்ட தியாகிகள் பற்றியும் அவர்கள் செய்த தோண்டும் வீரம் பற்றியும் நம் பாட புஸ்தகத்தில் உண்டு. அம்பேத்கர் முதல் கொண்டு திலகர் வரை நமக்கு தெரியும் அதே வேளை .... வட இந்தியாவில் போயி கேட்டு பாருங்கள்...காமராஜரை, அண்ணாவை, கட்டபொம்மனை, வவுசி'யை,மருது பாண்டியரை,கொடிகாத்த குமரனை, சேரனை, சோழனை, பாண்டியனை....தெரியுமான்னு ஒரு நாதாரிக்கும் தெரியாது.....இதுக்கு முக்கிய காரணமே நம்ம ஆட்சியாளர்கள்தான்....தமிழை செம்மொழி ஆக்கியவர்கள் முதலில் வட இந்திய பாட புஸ்தகத்தில் தமிழை பற்றி தமிழனை பற்றி தமிழன் வரலாறை பற்றி குணத்தை பற்றி, வீரம், விவேகம்,காதல்,பற்றி சொல்ல தவறி விட்டார்கள்...
கடைசியாக : லுங்கி உடுத்தவன் எல்லாம் அண்டி[சாரி] இல்லாதவன்னு நினைச்சுட்டு இருக்கானுங்க வட இந்திய காரனுவலும், வெக்கமில்லாத மீடியாவும்...
.......சாரி மக்கா கக்கு.....

பெயரில்லா சொன்னது…

என்ன செய்றது...தமிழனை நம்ம பிரதமர் மதிச்சா தானே இவனுக மதிப்பானுக

பெயரில்லா சொன்னது…

தமிழன் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்ல உள்ளே கிடக்குறானே அதனால தமிழன்னாலே அவனுகளுக்கு கடுப்புதான்

MoonramKonam Magazine Group சொன்னது…

சரியான கருத்து... இண்ட்லியில் வாக்களித்துவிட்டேன்

எம் அப்துல் காதர் சொன்னது…

// தமிழ் பேசுவதை பெருமையாக நினைப்பது இல்லை. தமிழன் என்று தலை நிமிர்ந்து நிற்பதில்லை.... திடீர் என்று தமிழர் என்று ஒன்று பட சொன்னால், எப்படி முடியும்? //

தமிழர்கள் எங்கே ஒன்று பட்டாலும், அதை பிரித்து வைக்க, ஏதோ ஒரு மாயை அங்கே வேலை செய்து கொண்டே இருக்கும். கடைசியில் புலப்பம் மட்டுமே மிஞ்சும்

ஜீவன்சிவம் சொன்னது…

தமிழனை காக்க தமிழ் நாட்டிலேய ஆளை காணோம், வடநாட்டிலே போய் தேடரீங்களே

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக