பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், டிசம்பர் 20

ஒலியும் ஒளியும் - 1

பழைய படங்கள், பழைய பாடல்கள். ஆனால் அவைகளை மீண்டும் மீண்டும் கண்டுகளிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தற்போது உள்ள சூழ்நிலையில் தவிர்க்க இயலாதவை இன்றியமையாதவை. எழுபதுகளில், மாஸ்ட்ரோ இளையராஜா வரும் வரை ஒரு வெற்றிடம் உண்டானது. 

ராஜாவின் வருகை திரை இசை உலகை ஒரு புதிய பாதையில் இட்டுச்சென்றது. பின்னர் யார் யாரோ வந்தார்கள், இசைப்புயல் ரஹ்மான் வந்தார், அங்கிருந்தும் ஒரு புதிய பாதை உண்டானது. பின்னர் ஏனோ தெரியவில்லை மறுபடியும் ஒரு தொய்வு. இப்போது திரைஇசை பாடல்கள் அனைத்தும் வெறும் சப்தங்களால் மட்டுமே நிறப்பப்பட்டு வருகின்றன. திடீர் இட்லி, திடீர் புளியோதரை, திடீர் பாயசம் போல திரை இசை  பாடல்களும் ஆகிவிட்டன. தன்னை கேட்பவர்களை கவரும் அந்த பெரும் குணம் மாறிவிட்டது. மாறாக சலிப்பையே தருகிறது.வழக்கம் போல இதுவும் மாறும் என்ற நம்பிக்கைதான். 

கருப்பு வெள்ளையில் காவியம்? 
இந்த  கன்னடத்து பைங்கிளி யின் குறும்பை கவனியுங்க.



சிவாஜியின் ட்ரஸ் சென்ஸ் பிரமாதம் !
(அப்படியே என்னை காப்பி அடிச்சிட்டார்!)


அறுபதுகளில் வெஸ்டர்ன் டான்ஸ் - தமிழ் படங்களில் 


ஆங்கிலத்தில் வரும் sub title ஐ கவனியுங்கள், காமெடியாக இருக்கும்! :)))


தொடரும் 



17 comments:

THOPPITHOPPI சொன்னது…

என்னனே ஒரே வீடியோவா போடுறிங்க

வேலன். சொன்னது…

அட...அப்படியே உங்கள் காலத்து தியாராஜ பாகவதர் பாடல்களையும் போடுங்களேன்..எங்கள் கொள்ளு தாத்தா விருப்பி பார்ப்பார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

தமிழ் உதயம் சொன்னது…

OLD IS GOLD.

பொன் மாலை பொழுது சொன்னது…

// THOPPITHOPPI சொன்னது…
என்னனே ஒரே வீடியோவா போடுறிங்க //

இதுதான் வேலை ஈசியாக உள்ளது. மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டாமே!

பொன் மாலை பொழுது சொன்னது…

// வேலன். சொன்னது…
அட...அப்படியே உங்கள் காலத்து தியாராஜ பாகவதர் பாடல்களையும் போடுங்களேன்..எங்கள் கொள்ளு தாத்தா விருப்பி பார்ப்பார்..//

மாப்ள இது ரொம்ப ஓவரு ஆமா. தியாகராஜர் காலத்து பாடல்கள் எங்கள் காலத்து பாடல்கள் அல்ல. அதுவே எனக்கும் தாத்தா காலத்து பாடல்கள்தான். இங்குள்ள பாடல்கள் கூட நான் அரை ட்ராயர் வயதில் கேட்டவைகளே. ஏதோ ஒரு பத்து வருஷம் முன்னாடி நாங்க வந்துட்டோம்னு ரொம்பதா சிலுப்பாதீங்க கண்ணுகளா! :))))))

பொன் மாலை பொழுது சொன்னது…

//தமிழ் உதயம் சொன்னது…
OLD IS GOLD.//


ஆமாம் ,பின்னே அதில் என்ன சந்தேகம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ரைட் ... ரைட் ...

மாணவன் சொன்னது…

//இப்போது திரைஇசை பாடல்கள் அனைத்தும் வெறும் சப்தங்களால் மட்டுமே நிறப்பப்பட்டு வருகின்றன. திடீர் இட்லி, திடீர் புளியோதரை, திடீர் பாயசம் போல திரை இசை பாடல்களும் ஆகிவிட்டன. //

மிகச் சரியாக சொன்னீர்கள்... அருமை

காலத்தால் அழியாத பாடல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

என்றும் இனியவை.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
மாணவன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
புவனேஸ்வரி ராமநாதன்.

Gayathri சொன்னது…

என்ன இருந்தாலும் பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான்

Philosophy Prabhakaran சொன்னது…

மூன்றாவது வீடியோ ரசிக்க வைத்தது... என்ன ஒரு நடனம்...

PB Raj சொன்னது…

நல்ல பதிவு கக்கு மாணிக்கம்,ஆனால் புதிய பாடல்களிளும் சில நல்ல பாடல்கள் உள்ளன மாற்றங்கள் மாறது?

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
Gayathri
philosophy பிரபாகரன்

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி
ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) - உங்கள் கருத்தையும் ஏற்றுகொள்கிறேன்.
ஆனால் இவைகள் முன்னைப்போல ஜன ரஞ்சகமாக இல்லை அல்லவா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக