பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஆகஸ்ட் 4

வெங்காயமும் தின்றுவிட்டு செருப்படியும் வாங்கிக்கொண்டிருக்கும் ....

அ.தி.மு.க ஆட்சி முடியபோகிறது அடுத்து என்ன?    தி.மு.க தானே?
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை, அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்" என்றான்.

அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக்கொண்ட்டான்.
அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை. எனவே அவன் "மன்னா, என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை  எனவே நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறென்" என்றான்.  அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை எனவே.  வெங்காயமே திண்பதாக கூறினான்.

மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்குமேல் முடியவில்லை, எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை,.  மீண்டும்
வெங்காயம்- எரிச்சல் தாங்கமுடியவில்லை,
மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான்.

அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்.. வேறு வழியே கிடையாது என அறிவாளி போல் சிந்திக்க தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க,  5 ஆண்டு அ .இ .அ.தி.மு.க என  மாறி மாறி  பதவியில் வைத்து   வெங்காயமும் தின்று செருப்படியும்  வாங்கும்  தமிழக முட்டாள்கள் நாம்தான். 

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக