பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூலை 16

உண்மையான எதிரி மூவர்

இன்று திராவிட கோஷ்டிகளுக்கு எதிரி பாஜகவும் அல்ல , பார்ப்பானும் அல்ல, இந்துமதமும் அல்ல‌
உண்மையான எதிரி மூவர்
ஒருவர் மார்க் எனும் யூதர் மற்றவையர் ஜாவிட் கரீம் எனும் இஸ்லாமியர் மற்றவர் ஹட்லி எனும் கிறிஸ்தவர்
ஆம் ஒரு யூதனும் ஒரு இஸ்லாமியனும் ஒரு கிறிஸ்தவனுமே இவர்கள் எதிரிகள். இந்த தமிழக மைனாரிட்டி மதங்களுக்காக திராவிட கோஷ்டி பாடுபட்டு கொண்டிருக்க அந்த நன்றி இல்லாத ஆரிய பார்ப்பானிய கைகூலியான இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் அந்த துரோகத்தை செய்துவிட்டார்கள்
என்ன செய்தார்கள்
மார்க் என்பவர் முகநூலை கொடுத்தார், மற்ற இருவரும் யூ டியூபை கொடுத்த்தார்கள்
இந்த இரண்டும் இல்லையென்றால் இன்று என்ன ஆகியிருக்கும் என நினைகின்றீர்கள்?
வெற்று பிம்பங்களை பெரும் தலைவர்களாக சித்தரித்த கூட்டம் முக ஸ்டாலினை இன்று ரஷ்ய அதிபர் ஸ்டாலின், துருக்கியின் கமால் பாட்சா, சீனாவின் மாவோ அளவுக்கு பெரும் பிம்பமாய் உருவாக்கியிருக்கும்
ஆம், அது நிச்சயம் நடந்திருக்கும் ஆனால் இந்த மூன்று துரோகிகளின் அட்டகாசத்தால் அது நடக்காமல் போனதுதான் சோகம்.
அதை இந்த சமூக ஊடகங்கள் நொறுக்கி போடுகின்றன‌
ஈரோட்டு ராம்சாமி முதல் கருணாநிதி வரை முகமூடிகள் கிழிக்கபடுகின்றன, திராவிட இயக்கம் கட்டிவைத்த மாய மாளிகைகள் நொறுங்குகின்றன, இடியவே இடியாது என்றிருந்த கோட்டைகள் காகித சுவராய் சரிகின்றன‌
அஞ்சி நடுங்கி ஓடுகின்றன திராவிட கும்பல்கள். ராமனை நாங்கள் செருப்பால் அடிக்கவில்லை என மன்றாடுவதும், கந்த சஷ்டி கவசம் புனிதமானது எங்களை மன்னித்துவிட்டுவிடுங்கள் என அவர்கள் பின்வாங்குவதும் இங்கு 80 ஆண்டுகளில் புதிது, மிக புதிது
அவ்வளவு பெரும் அடிகளை அவர்களுக்கு கொடுக்கின்றது இந்த சமூக ஊடகங்கள். இது அவர்கள் கனவிலும் எதிர்பாரா விஷயம்.
இந்த ஆரிய பார்பானிய கைகூலிகளின் ஊடகத்தை இன்னும் திக திமுக கோஷ்டி புறக்கணித்துவிட்டு வெளியேறாத மர்மம்தான் புரியவில்லை
ஒருவேளை பகுத்தறிவு கழன்றுவிட்டதா, இல்லை சுயமரியாதை களவு போய்விட்டதா என்பதுதான் தெரியவில்லை

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக