//1857 இல் நடந்த விடுதலைப் போரை ஆங்கிலேயர்களும் காங்கிரஸ் கட்சியும் சிப்பாய் கலகம் என்று பதிவு செய்ய இல்லை அது கலகம் அல்ல இந்தியதிருநாட்டின் முதல் சுதந்திரப் போர் என்று அறைகூவலிட்டு ரத்தமும் சதையுமாய் உயிரோட்டமுள்ள காவியமாக முதல் சுதந்திர போர்1857என்று பதிவு செய்த வீரத் திருமகன் //
இந்திய சுதந்திர வரலாற்று மோசடி. RSS காரர்கள் கைகளில் நாடு சென்றடையும் என்ற மிகுந்த எச்சரிக்கையுடன்தான் அன்றைய காங்கிரஸ் நேதாஜி, பட்டேல் , திலகர் போன்றே வீர சாவர்க்கர் உண்மை வரலாறுகளையெல்லாம் தூக்கி கடாசிவிட்டு காந்தி, நேரு, நேருவின் குடும்பம் மட்டுமே என்று கட்டுக்கதைகளை எழுதியும், பிற நாட்டு முகலாயர்கள் மற்றும் அந்நிய கிருஸ்துவர்கள் இந்தநாட்டுக்கு நன்மைகள் மட்டுமே செய்துள்ளனர் என்ற அடிப்படியில் கல்விச்சாலைகளில் பாடத்திட்டங்கள்.
இந்தியாவின் தொல்லியல் வரலாறுகள் காங்கிரஸ் - இடதுசாரிகளால் மாற்றி அமைக்கப்பட்டதைப்போலவே, தமிழ் நாட்டிலும் தமிழ் மன்னர்கள், வ.உ.சி,தேவர் திருமகன் போன்ற எண்ணற்ற தமிழ் சான்றோர்களை புறந்தள்ளிவிட்டு, எதோ திராவிடர்கள் மட்டும்தான் தமிழர்களுக்கு கிடைத்த வரம் என்பது போலவே இவை எல்லாமே நடத்தப்பட்டுள்ளன. ஈ. வெ . ராமசாமிக்கு பதிலாக வீரர் சவார்கரின் பாடம் அல்லவா நாம் படித்திருக்க வேண்டும்....!
தமிழகம் உள்பட ஒட்டு மொத்த பாரதத்தின் உண்மையான வரலாறுகள் மீண்டும் பள்ளி கல்லூரிகளில் கொண்டுவரப்படவேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக