பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜனவரி 3

வேண்டாம் விஷப்பரீட்சை மிஸ்டர் மணிரத்தினம்

Staney Alphonse Rajan Stanley Rajan மற்றும் Stanley Rajan உடன் உள்ளார்.

சரி அடுத்த யுத்த எச்சரிக்கையினை மணிரத்னம் மேல் தொடுக்கலாம்
மிஸ்டர் மணிரத்னம்,
பொன்னியின் செல்வன் கதைபடி அக்கதை இந்துகதை, இந்து ராஜ்யத்தில் இந்து மன்னனின் இந்து அரச குடும்ப கதை
அக்கதையில் ஒழுங்காக இந்துக்கள் அடையாளம் வருமாறு குறிப்பாக இந்துக்களின் வழிபாடும் அடையாளமும் நெற்றியில் திருநீறும் இன்னும் பல சைவ அடையாளமும் வரும்படி பார்த்து கொள்ளவும்
மாறாக இந்த பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம் இடையத்துவம் வரிசையில் கருணாநிதியின் உளியின் ஓசையில் திருநீறு இன்றி சோழமன்னன் அபத்தமாக வந்தது போல் உங்கள் படத்து பொன்னியின் செல்வன் பாத்திரம் வந்தால் தமிழகம் சும்மா இருக்காது
ஏற்கனவே கதா பாத்திர படம் நீண்ட முடியுடன் வருகின்றதே தவிர ஒரு நெற்றியிலும் நீறு இல்லை
சோழபேரரசு சைவ சமய அரசு, நீரில்லா நெற்றியுடன் அவர்கள் வர வாய்ப்பே இல்லை
ஒழுங்காக தமிழனின் சைவ சமய பின்னணியுடன் அப்படத்தை எடுத்தால் உங்களுக்கும் நல்லது, படகுழுவுக்கும் நல்லது
மாறாக வெளிநாட்டு கைகூலியின் அடிவருடி புத்தியுடன் தமிழனின் இந்து அடையாளங்களை மறைத்தால் , கருணாநிதியின் உளியின் ஓசை சாயலில் எடுத்தால் அப்படத்தின் கதிதான் உங்கள் படத்துக்கும் ராவணா போல் வரும்
கருணாநிதியின் உளியின் ஓசையில் திருநீறும் வராது லிங்கமும் வராது, ஆனால் கதை மட்டும் தஞ்சை பெரியகோவில் கதையாம்
படம் எப்படி ஓடும்?
அதில் இருந்து நீங்கள் பாடம்கற்று கொள்ள வேண்டும்
ஏற்கவனே திராவிட இம்சைகளின் ராவண காவியத்தைத்தான் ராவணா என எடுத்து அதாவது வால்மிகி மற்றும் கம்ப ராமாயணத்தை திரித்து எடுத்து சிக்கினீர்கள்
அன்றே உங்களை எச்சரித்திருக்க வேண்டும் ஆனால் படத்தின் முடிவு எச்சரித்தது
விடாமல் கடலிலும் கிறிஸ்துவ சாயல் பேசினீர்கள், படம் முடிவும் அதையே எச்சரித்தது
இப்பொழுதும் பொன்னியின் செல்வனில் இந்து சைவ அடையாளத்தை மறைத்து நீரில்லா நெற்றியும், லிங்கம் இல்லா ஆலயமும் காட்டி தமிழனின் கதைக்கு மதமில்லை என நிறம் அடித்தால் தமிழகம் தாங்காது
அதனால் தமிழனின் பாரம்பரிய கதையினை விபூதி நெற்றியும் இந்து அடையாளமும் கொண்டு உண்மையாக நீங்கள் வடித்திடல் வேண்டும்
இல்லையேல் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு
சோழமன்னன் உடலெல்லாம் விபூதி பூசிவரும் சைவ தொண்டன், அக்காட்சிகளை நுணுக்கமாக தவிர்த்தால் நாம் சும்மா இருக்கமாட்டோம்
தமிழனின் ஆகசிறந்த உன்னத படைப்பை அவனின் பாரம்பரிய மத பின்னணியோடு எடுக்காவிட்டால் உங்கள் கலைதிறமைக்கு நீங்கள் செய்யும் பாவத்துக்கு பரிகாரமே கிடையாது
அது பாவத்திலெல்லாம் பெரும்பாவம், எந்த பாதிரியும் அதற்கு மன்னிப்பு கொடுக்க முடியாது
தமிழகமும் இத்தேசமும் உங்களை சும்மா விடாது.
ஒரு தமிழனாக அதன் பாரம்பரியத்தையும் பெருமையினையும் காக்க விரும்பும் தமிழனாக உங்களுக்கு கோரிக்கை வைக்கின்றோம்
பண்டைய தமிழ் மன்னர்களும் இந்துமதமும் அதுவும் சோழமன்னர்களும் இந்துமதமும் பிரிக்க முடியாதவை
ஏதும் நீங்கள் குழப்பினால் பா.ரஞ்சித் நிலமைக்கு செல்வீர்கள் என்பது உங்களுக்கே புரியும்


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக