பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜனவரி 29

’என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? அவங்கள மதம் மாத்தச்சொன்னா என்னை மதம் மாத்திட்டீங்களேடா?’




இயேசுநாதரின் ஹிந்து அவதாரம், திடுக் ஜோஷுவா புராஜெக்ட்!

’என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? அவங்கள மதம் மாத்தச்சொன்னா என்னை மதம் மாத்திட்டீங்களேடா?’ பாரம்பரியமான ஹிந்து தெய்வத்தின் வேடத்தில் இருக்கும் ஏசு இப்படி வசனம் பேசுவது போன்ற ஒரு மீம் கொஞ்சகாலமாகவே வைரலாகி வருகிறது.
என்னதான் நடக்கிறது? என்று உள்ளே கிளறினால் ‘அத்திவரதரை காப்பியடித்து அத்தி ஏசு, மதுரை கள்ளழகர் போலவே கள்ளழகர் ஏசு, கருப்புசாமியை ஜெராக்ஸ் எடுத்ததுபோல இருக்கும் கருப்புசாமி ஏசு, தில்லை நடராஜரை பிரதிபலிக்கும் நடராஜர் ஏசு என்று ஏசுவின் வகைவகையான அலங்காரங்கள் வெளியாகிவருகின்றன. இன்னும் சில தினங்களில் வரப்போகும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேரி மாதா கையில் விநாயகர் ஏசு இருக்கும் புகைப்படமும் வெளியாகி பலரையும் தலையை பிய்த்துக்கொள்ள வைத்துள்ளது.
ஏசுபிரானை வைத்து உருவாக்கப்படும் இந்த புது உருவங்கள் ஆர்வக்கோளாறின் வெளிப்பாடா அல்லது இதற்கு பலமான பின்னனி ஏதும் உண்டா என்று விசாரித்தோம். அப்போது ’ஜோஷுவா புராஜெக்ட்’ என்ற திட்டத்தின் செயல்வடிவம்தான் மேற்படி யேசுநாதரின் அவதாரங்கள் என்று பதில் கிடைத்தது.
அது என்ன ஜோஷுவா புராஜெக்ட்? அதன் நோக்கம் என்ன என்று விசாரணையில் இறங்கினோம் . இதுப்பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திவரும் விஜில் அமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரிடம் கேட்டோம். அவர் கூறும்போது ‘ஜோஷுவா புராஜெக்ட்’ என்பது 1995ம் ஆண்டு அமெரிக்காவின் ’கொலராடோ ஸ்பிரிங்க்ஸ்’ என்ற ஊரில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். கிறுஸ்துவ மதத்தை பரப்புவதற்காக இது உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பல கிறுஸ்துவ நிறுவனங்கள் இதன் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டுதான் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜோஷுவா திட்டம் ஓங்கி ஒலிக்கிறது என்பதற்கு சாட்சி வெளியாகியிருக்கும் இந்த படங்களே!
ஐரோப்பியர்கள் கடல் கடந்து புதுப்புது காலனிகளை உருவாக்கத்தொடங்கிய காலத்திலேயே கிறுஸ்துவ மதமும் அவர்களுடன் பயனப்படத் தொடங்கிவிட்டது. அதாவது ராணுவ பலத்தோடு மோதி ஒரு நாட்டை வெல்வதைவிட மதத்தை பரப்பி, மக்களை ஐரோப்பாவில் உள்ள ஏதாவது ஒரு சர்சுக்கு கட்டுப்படிய வைத்தால் சுலபமாக நாட்டை பிடித்துவிடலாம் அல்லவா? பிற்காலத்தில் நாடுகள் சுதந்திரம் அடைந்தாலும் மக்களின் விசுவாசம் என்னவோ ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சர்சு பாதிரியாரிடம் மட்டுமே இருக்கும். இதை உத்தேசித்துதான் அன்று முதல் இன்று வரை மதமாற்றம் நடந்து வருகிறது. ஆக மதமாற்றம் என்பது புதுவகையான காலனி ஆதிக்கத்திற்காக செய்யப்படும் விஷயமே.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக