பெரியார் என்பவர் ஒன்றும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவர் அல்ல, சர்ச்சைகள் ஏராளம்
மதுரையில் அவரை மத நம்பிக்கையாளர்கள் சுற்றி பெடல் எடுத்ததில் இருந்து மதுரை பக்கம் அவ்வளவாக செல்வதில்லை, முத்துராமலிங்க தேவர் இருந்தவரை மதுரை பக்கம் அதிகம் சென்றவருமல்ல
பிராமணர் தவிர எந்த சாதியினையும் அவர் எதிர்த்தவருமல்ல, பெரியார் புரட்சியாளர் என்பதெல்லாம் பவர் ஸ்டார் ரஜினிகாந்தை முறியடிப்பார் எனும் ரகம்
அவரின் கருத்து ஒன்றும் சொந்த கருத்தும் அல்ல, ரஷ்ய நாத்திகம் பொதுவுடமை எல்லாம் மொழிமாற்றி பிராமணர் மேல் குறிவைத்து பேசிகொண்டிருந்தார்
தமிழும் இந்துமதமும் பிராமணமும் ஒரே சங்கியில் இருந்ததை உடைக்க எண்ணிணார், கவனித்தால் உங்களுக்கே புரியும்
சுயசிந்தனை எனவோ, தீர்க்கதரிசனம் எனவோ எதுவுமே இல்லை
கடைசிவரை பிராமணரை தவிர எந்த சாதியினையும் அவர் சாடவில்லை, சாடினால் தொலைத்துவிடுவார்கள் என அஞ்சினார் அது கண்கூடு.
சொந்த இனமான நாயுடுக்கள் வைத்திருந்த பெரும் மில்களின் கூலிதொழிலாளர் தாழ்த்தப்ட்டவராயிருந்தும் அவர் கண்டுகொள்ளவே இல்லை
பிராமணனை ஒழித்தால் எல்லாம் சரியாகும் என வெற்று சித்தாந்தம் கொண்டிருந்த வறட்டு மனிதர் அவர், சுய அறிவு ஒரு காலமும் இருந்ததில்லை
தன் கூட இருந்த யாரையும் அவர் நம்பவில்லை, சொத்துக்களுக்காக இருக்கின்றார்கள் என் சொத்து என் வாரிசுக்கே என்றுதான் மணியம்மையினை திருமணமே செய்தார்
அதை மெய்பிக்கும் வகையில் சொத்து இல்லா பெரியார் செத்ததற்கு சமம் என அண்ணா கோஷ்டியும் வெளியேறிற்று
சொத்தினை வீரமணியிடம் இருந்து தன் வாரிசுக்கு கொடுக்க மணியம்மையினை திருமணம் செய்தார், அதுவும் பலனழிக்கவில்லை
ஒருவித பிடிவாதமான , பணம் இருந்தால் மரியாதை வேண்டும் என அடம்பிடித்த முரட்டு சுபாவமுள்ள அறிவற்ற ஆசாமி ராம்சாமி.
கடைசியில் அவர் அஞ்சியபடியே சொத்து வீரமணிக்கே சென்று சேர்ந்தது
கருணாநிதி வெளிவந்து பெரியாரைவிட அதிக சொத்து சேர்த்துவிட்டு சென்றுவிட்டார்
அண்ணா என்பவர் மட்டும் இதில் மகா வெகுளியாக இருந்திருக்கின்றார் பாவம், சல்லிகாசு அவருக்கு பெரியார் வழியிலிருந்தும் திமுக அரசில் இருந்தும் வரவே இல்லை பாவம்
அவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான், அவர் போட்ட மூக்குபொடியும் அந்த கல்லறை ஒன்றே அவருக்கு மிச்சம்.
0 comments:
கருத்துரையிடுக