பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூன் 26

வாயை பிளக்காதீர்கள் ...! இன்னும் வரும்..!!

தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அமெரிக்க உளவுத்துறை இந்திய மிஷநரிகளுடன் சேர்ந்து செய்த சதி!!! ஆச்சர்யமா,, கீழே படியுங்கள் கொஞ்சம் பெரிய பதிவுதான்.
'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்' இது பழமொழி. இந்தியாவில் இப்போது கலாச்சார மையம் என்ற பெயரில் இயங்கிவரும் மதம் மாற்ற இயக்கங்களை காரி துப்புகிறது இப்புத்தகம். தோமா என்கிற இல்லாத மனிதரை உருவாக்கி பிறகு அதற்க்கு வலு சேர்க்க பொய்க்குமேல் பொய்யை கூறுவது. இவர் திருவள்ளுவரை சீடராக்கினார் என்று கூறுவது இப்படி பல அபத்தங்கள். தோமா குறித்த பழைய கிறிஸ்தவநூல்கள் சிரியா மற்றும் ஜோர்டானில் உள்ளவை என்ன கூறுகிறதென்றால் 'தோமா காலாமினா என்ற இடத்தில் மரணமடைந்தார், பிறகு அவரது எலுப்புகள் 300 ஆண்டுகளுக்கு பிறகு மெசொப்பொத்தாமியாவில் உள்ள எடிசா என்னுமிடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டன', இதையெல்லாம் அறியாத கூமுட்டைகள் தோமா சென்னை பரங்கிமலையில் ப்ராஹ்மணரால் கொலையுண்டார் என்று ப்ராஹ்மண வெறுப்பை உமிழ்வதற்க்காக மட்டுமே பயன்படுத்திடுகிறார்கள்.
Journal of the Institute of Asian Studies
World Tamil Spiritual Awareness Movement
Dravidian Soulology Movement (தெய்வநாயகம், மகள் தேவகலா)
National Institute of Leadership Training
Mylapore Institue of Indigenous Studies
என்ற பெயர்களை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது, இது எதோ தலைசிறந்த இயக்கம்போல் தோன்றும், இவர்கள் செய்வது அனைத்தும் ஹிந்து மதத்தை இகழ்வது, இவர்கள் தவறாமல் தங்கள் கருத்துக்களை வெளியிட பத்திரிக்கைகளும் நடத்துகிறார்கள், இது வெளிநாட்டு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் இயக்கங்கள். இவர்கள் பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நியூயோர்க்கில் மாநாடு நடத்துவார்கள் அதில் 'வைணவம், சைவம், திராவிட வழிபாடுகள் அனைத்தும் பைபிள் பழைய ஏற்பாட்டில் இருந்து வந்தவை என்று ஆணித்தரமாக கத்துவார்கள், திருக்குறள் பைபிளை படித்து திருவள்ளுவர் எழுதியது, முருகப்பெருமான்கூட பைபிள் கதையிலிருந்து வந்தவர், சமணம், பௌத்தம் எல்லாம் பழைய ஏற்பாட்டின் தாக்கமே, சமஸ்க்ரிதம் தோமா கொண்டுவந்த மொழி, கிருஷ்ணர் கதைகூட கிறிஸ்துவிற்கு பிறகு உருவானது. இவர்கள் இதற்காக எடுத்துரைக்கும் ஆதாரங்களை பார்த்தால், சிறு குழந்தைகூட காரி துப்பிவிடும்.
அமெரிக்காவில் மரிலாண்ட் என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் தமிழ் கிறிஸ்தச்சியால் (Rani David) நடத்தப்படும் பரதநாட்டிய பள்ளி, பரதநாட்டியத்தை ஹிந்து மதத்திலிருந்து வேரோடு பிடிங்கி எறியுவேன் என்ற சபதத்தோடு, கிறிஸ்தவ முத்திரைகளை பரதநாட்டியத்தில் சேர்த்து அதை கிறிஸ்தவ நடனமாக மாற்றிவிட்டார், அதை இப்போது உலகெங்கிலும் பரப்பிக்கொண்டிருக்கிறார், இதன் தொடர்ச்சியாக சென்னை கலாக்ஷேத்திராவில் இயக்குனராக இருக்கும் கிறிஸ்தவ பெண்மணி அங்குள்ள ஒவ்வொரு இடத்திலிருந்து ஹிந்து தெய்வ சிலைகளை அகற்றிவிட்டு, நாட்டியம் கற்ற மாணவிகளுக்கு வழங்கும் சான்றிதழில் காலம்காலமாக இருந்த நடராஜர் படத்தை நீக்கிவிட்டார், இப்போது நாட்டியம் கிறிஸ்தவ முத்திரையுடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருச்சியில் இருக்கும் கலைக்காவேரி கல்லூரியில் பரதநாட்டியத்தை கிறிஸ்தவத்துடன் இணைத்துவிட்டார்கள், மற்றும் பல கிராமிய கலைகள் கிறிஸ்தவத்திலிருந்து வந்தது என்று கற்பிக்கப்படுகிறது.
பாளையம்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் Dept of Folklore என்ற துறையில் எப்படி நாட்டுப்புற பாடல்கள் கிறிஸ்தவத்துடன் ஒத்துப்போகிறது என்ற ஆராய்ச்சி மிகப்பெரிய அளவில் நடந்து அதை புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.இங்கே செய்யப்படும் ஒவ்வொரு கிராமீய கலைகள் ஆராய்ச்சியிலும் கிறிஸ்தவம் இருக்கவேண்டும், அப்போதுதான் சான்றிதழ் வழங்கப்படும்.
2001இல் தென் ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடு சபை நடத்திய ஒரு மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த தெய்வநாயகம் (இவர்தான் தோமா இந்தியா வந்தார், திருவள்ளுவரை சீடனாக்கினார் மற்றும் மஹாபாரதம் பைபிள் பழைய ஏற்பாட்டின் தாக்கமே என்று சென்னை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து Ph.D பட்டம் வாங்கியவர்) மற்றும் அவரது மகள் தேவகலா கலந்துகொண்டு 'அனைத்து சமுதாய பிரச்சினைகளுக்கும் காரணம் ப்ராஹ்மணர்களும் ஹிந்துமதமும்தான் என்று பேசினார். 'சர்வதேச இனவாதம்- இந்திய சாதியத்தின் குழந்தை' என்ற நூலையும் அந்த மாநாட்டில் வெளியிட்டனர். 2004இல் தேவகலா தமிழகத்தில் மதம்மாற்ற பாதிரிகளுக்கு கையேடாக ஒரு புத்தகத்தை வெளியிட்டனர் 'இந்தியா தோமா வழி ஒரு திராவிட கிறிஸ்தவ நாடே...', இதை படித்துதான் இன்று பல முகநூல் கிறிஸ்தவ போராளிகள் கம்புசுத்துகிறார்கள்.
இந்த தெய்வநாயகம் பிள்ளை அமெரிக்காவில் பல இடங்களில் மாநாடு நடத்துவார் இதற்க்கு ஹிலாரி கிளின்டன் வந்து வாழ்த்துரை கூறினார், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆலோசகர் ஒரு கிறிஸ்தவ வெறியர், கிறிஸ்தவத்தை பரப்ப என்ன பொய் செய்தியை வேண்டுமானாலும் வெளியிடுவார், இவருடன் தெய்வநாயகம் கூட்டணி வைத்துக்கொண்டு, இவரை காஞ்சிபுரத்திலுள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று அங்கே இருக்கும் சிற்பங்கள், தூண்கள் அனைத்தையும் காட்டி அதில் கிறிஸ்தவத்தின் தாக்கம் இருப்பதாக கட்டுரை வெளியிட்டனர்.
ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி சொன்னதும் ஏன் எல்லோரும் குதித்தார்கள் என்று இப்போது புரியும்
இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு புத்தகங்களும் இப்போது நாம் பெரிதுபடுத்துவதில்லை, அதன் பூதாகார விளைவு இன்னும் சில வருடங்களில் வெளிப்படும், எப்படியென்றால்; மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றினார் அவர் 'திராவிடம்' என்ற சொல்லை அதில் வைத்தார் அதற்க்கு காரணம் அவருக்கு சுமார் 75 வருடங்களுக்கு முன்பு மிஷநரி கால்டுவெல் மற்றும் ஜி.யு.போப் கொண்டுவந்த திராவிட கொள்கை. சுந்தரனாருக்கு சில காலம் முன்பே சொல்லப்பட்டுவிட்டதால் அது அவருக்கு வரலாறாக தெரிந்திருக்கிறது, அதனால் அதை எடுத்துக்கொண்டார். இதேபோல் 1905 இற்கு பிறகு தமிழகத்தில் பலரும் அவர்களுக்கு கடந்தகால பொய்கதைகளை வரலாறாக எடுத்துக்கொண்டார்கள், முட்டாள் கன்னட ராமசாமி உட்பட. அதனால் இப்போது வெளியிடப்படும் பல பொய் கதைகள் இன்னும் 70 ஆண்டுகளில் வரலாறாக மாற்றப்பட்டு அடுத்த தலைமுறை அறிவு ஜீவிகள் இதை தமது வழிகாட்டி நூலாக எடுத்துக்கொள்வார்கள்.
நாம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெருமையாக பேசப்படும் ஒரு விஷயம் தமிழ், சமஸ்க்ரிதம் போன்ற மொழிகள் பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் பாடமாக உள்ளது என்று. நம் மீது பாசத்தில் இது நடத்தப்படுகிறது என்று நினைத்து விடாதீர்கள், தமிழும் சமஸ்க்ரிதமும் எப்படி பைபிள் பழைய ஏற்பாட்டுடன் தொடர்புள்ளது என்று நிறுவவேண்டும், அதற்குண்டான போலி சான்றுகளை திரட்டி வழங்குபவர்கள் எலும்புத்துண்டுக்கு அலையும் தமிழக பாதிரிகள், அமெரிக்காவில் Yale, Harvard, California போன்ற பல்கலைக்கழகங்களில் தமிழ், சமஸ்க்ரித துறையில் பணியாற்றுபவர்கள் கிறிஸ்தவ வெறியர்கள் மற்றும் இவர்கள் தமிழகத்திலுள்ள மேலே முதலில் நான் சொன்ன இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்கள். அவர்கள் கிறிஸ்தவ தேவைக்கேற்ப ஒரு திராவிட அகராதியை உருவாக்கியுள்ளனர், அப்போது அண்ணாவால் (1949) உருவான திராவிட முன்னேற்ற கழகம் கட்சியினை அவர்கள் பெருமளவில் ஆதரித்தனர்.
அந்த அகராதிதான் (Dictionary) பெருமளவில் கன்னட பெரியார் மற்றும் அண்ணா போன்றவர்கள் பிரிவினை பேச எடுத்துக்கொண்ட நூல். அமெரிக்கா அப்போது நமக்கு நட்பு நாடு கிடையாது, ஜவாஹர்லால் நேரு சோவியத் ரஷியாவுடன் நட்பில் இருந்தது அமெரிக்காவை உறுத்தியது, தென்னகத்தில் திமுக உதயமானதும் பிரிவினைவாத அரசியலை அது கக்க துவங்கியது, இதனால் மனம் குளிர்ந்த அமெரிக்கா இலங்கை வழியாக திராவிடவாதிகளுக்கு தமிழ்நாட்டு மிஷநரிகள் மூலம் பணம் சப்ளை பண்ண ஆரம்பித்தது. இதையெல்லாம் தாண்டி 1962 சீன போருக்கு பின் ஒரு மிகப்பெரிய தேச ஒற்றுமை உருவானது, இது அமெரிக்காவின் உளவுத்துறை சி.ஐ.எ வை உறுத்தியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்த எல்லா உதவிகளையும் செய்தது. அண்ணாத்துரைக்கு இதற்க்கு கைமாறாக அமெரிக்கா உள்துறை அமைச்சகம் 1968இல் ஒரு அழைப்பிதழ் அனுப்பியது, அவரை அமெரிக்கா வரவழைத்து Yale University-Chubb Fellow Membership கொடுத்தது. இதை பெற்ற முதல் அமெரிக்கரல்லாதவர் அண்ணாதுரை.
இப்போது புரிகிறதா,தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பணம் வருவதை தடுக்கவேண்டியதின் முக்கியத்துவம்.
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் சரவெடி.
நான் இங்கே கூறியது புத்தகத்தின் 0.5% விஷயங்கள்தான்.
பக்கம் 174_198்..மீள் கருடன்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக