பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மார்ச் 19

திடீர் காளான்கள்

ரெண்டு பொண்ணுக்கு அப்பாவா கேக்குறேன். என்ன பண்ண போறீங்க சி எம் ? - கமல் கேள்வி.



திரு.கமலஹாசன் அவர்களே, முதலில் உங்களை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு திராணி இருந்தால் நேரடியாக பதில் சொல்லுங்கள். இப்பொழுது பொள்ளாச்சி சம்பவத்தில், தேர்தல் சமயம் என்பதால், பிணம் தின்னி ஓநாய் போல, வீடியோ வெளியிட்டு ஊளையிடும் நீங்கள், சில மாதங்களுக்கு முன், தங்கள் சினிமாத் துறையை சார்ந்த பின்னணிப் பாடகி சின்மயி அவர்கள், வக்ரபுத்தி வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பொழுது தாங்கள் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? ஒரு சிறிய கண்டனத்தைக் கூட பதிவு செய்ய வக்கில்லாமல் வாய் மூடி மௌனியாக இருந்த தொடைநடுங்கி தானே நீங்கள். இப்பொழுது என்ன திடீர் கரிசனம்? தேர்தல் தானே?
நீங்கள் சார்ந்த துறையில் நடக்கும் ஒழுங்கீனங்களையே தட்டிக் கேட்க தைரியம் இல்லாத நீங்கள், இந்த தமிழ்நாட்டை புரட்டிப் போட்டு விடுகிறேன் என்று எப்படி வாய்ச்சவடால் பேசுகிறீர்கள்? பெண்களின் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு, ஒரு தகுதி வேண்டும். அது கிஞ்சித்தும் உங்களுக்கு கிடையாது. தங்களை நம்பி வந்த வாணி கணபதி, சரிகா, கௌதமி போன்றவர்களும் பெண்கள் தானே? அல்லது வெறும் சதைப் பிண்டங்களா? 1978-ஆம் ஆண்டில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம், நீங்கள் விதைத்த விதையைத்தானே இன்று தமிழகம் அறுவடை செய்து கொண்டு இருக்கிறது. சக கதாநாயகிகளின் மேல் உங்களுக்கு உள்ள வக்கிர சபலத்தை தீர்த்துக் கொள்ள, அந்நிய நாட்டு போக, மோகக் கலாச்சாரத்தினை தமிழ்நாட்டுக்குள் இறக்குமதி செய்த யோக்கிய சிகாமணி அல்லவா நீங்கள்! குருதிப்புனல் படத்தில், பெற்ற குழந்தைகளின் முன் பெற்றோர்கள் கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் தவறில்லை என்று வாதிட்ட புண்ணியவான் அல்லவா நீங்கள்!
நீங்கள் சமூகப் புரட்சி என்று கூறிக்கொண்டு பெண்களுக்கும், பெண்ணியத்திற்கும் எதிராக உங்கள் திரைப்படங்களில் காட்டிய அருவருக்கத்தக்க பல விஷயங்கள், பல வருடங்களாக வேரூன்றி, இன்று சமூகத்தில் சாக்கடையாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சாக்கடையின் ஊற்றுக்கண்ணாக இருந்த உங்களைப் போன்ற ஊதாரி நடிகர்கள் பலர் இன்று துர்நாற்றம் வீசுகின்றது என்று கூப்பாடு போடுவதுதான் விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.
யோக்கியமான ஆண்மகனாக இருந்தால், முதலில் உங்கள் குரல், உங்கள் துறை சார்ந்த பாடகி சின்மயிக்காக உயர்ந்து ஒலிக்கட்டும். வக்ரபுத்தி வைரமுத்துவின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டு வாருங்கள்; பிறகு பொள்ளாச்சி சம்பவத்துக்காகப் பொறிந்து தள்ளலாம்! பொள்ளாச்சி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைத்தாகிவிட்டது. விசாரணையின் முடிவில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க அனைவரும் சேர்ந்து குரல்கொடுப்போம்.
அது வரை கமலஹாசன் போன்ற திடீர் காளான்கள் தங்களின் நவதுவாரங்களையும் அடைத்துக் கொண்டு, மேலும் மேலும் தொடர்ந்து பொய்யாக நடித்து வீடியோ வெளியிடாமல் இருப்பதே, பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய கைமாறாக இருக்கும்.
நிஜ வாழ்வின் நிதர்சனப் பொழுதுகளின் போதும், நடிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் கமலஹாசன் போன்ற புல்லுருவிகளைப் புறக்கணிப்போம்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்போம்! பாரதி கண்ட புதுமைப் பெண்களாகவும், அதே சமயத்தில் ஒழுக்கம் சார்ந்த நம் கலாச்சாரத்தைப் பேணும் வகையிலும் நம் பெண்களை வளர்ப்போம்! பெண்ணியம் போற்றுவோம்! பெண்களைப் போற்றி வணங்குவோம்!


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக