பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மார்ச் 24

நீல நிறமாக இருக்கும் இவரது கண்கள்!




Picture of wax figure of actress Elizabeth Taylor in her role as "Cleopatra" at Madame Tussuads in Hollywood, California.








உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை எலிசபெத் டைலர் நேற்று காலமானார்.

லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வாழ்தவர்.சிறுவயதுகளில் நடிப்பில் நாட்டம் உள்ள குழந்தை நட்சத்திரமாக இருந்தவர்.இவரின் அழகும் ,கவர்ச்சியும் உலக பிரபலமாகும்.இரண்டு முறை ஆஸ்கர் வென்றவர்.அமெரிக்க சினிமாவில் இவர் அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் மர்லின் மன்றோ மட்டுமே.எலிசபெத் டைலர் அன்றைய ஆண்டுகளிலேயே (1963)ஒரு படத்திற்கு பணியாற்ற ஒரு மில்லயன் டாலர்களை சம்பளமாக வாங்கியவர்.நீல நிறமாக இருக்கும் இவரது கண்கள்.

எட்டுமுறை திருமணம் செய்துகொண்டு வாழ்கையை வாழ்ந்து பார்த்தவர். ஜோடியாக தன்னுடன் நடித்த ரிச்சர்ட் பர்டனை திருமணம் செய்துகொண்டு பல வருடங்கள் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்து பலவருடங்கள் கழித்து மீண்டும் அவரையே மணம் செய்துகொண்டார். மறுபடியும் பிரிந்தனர்.இவருடைய தனிப்பட்ட வாழ்கை மிக பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. பின்னாளில் அமெரிக்க எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கத்தில் சேர்ந்து அதனை பிரபலமாக்கினார்.

 நான் எண்பதுகளில் படிப்பிற்கு பின்னர் சென்னையில் வேலையில் சேர்ந்தபோது அந்த புகழ் பெற்ற திரைப்படம் கிளியோ பாட்ரா மீண்டும் சபையர் தியேட்டரில் வெளிவந்தது. பின்னர் சிலவருடங்கள் கழித்து மிட்லாண்ட் தியேட்டரிலும் வெளிவந்தது. பின்னர்ரும் அது தாம்பரம் நேஷனல் தியேட்டரில் ஓடியது.  எல்லா திரையிலும் அந்த படத்தை கண்டு பிரமித்த நாட்கள் இப்போது நினைவில். தூர்தர்ஷனில் கூட முன்பெல்லாம் இவர் நடித்த பழைய சினிமாக்கள் இடம் பெரும். அப்படி பார்த்த ஒரு படம் ப்ளூ பேர்ட் -  Blue Bird.பிறவியிலேயே மிக அழகாக இருந்தாலும் நம்ம ஊர் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி போல அநியாத்துக்கு மேக்கப்பு போட்டுகொள்வார்!





21 comments:

சக்தி கல்வி மையம் சொன்னது…

நினைவுகள் அருமை..

சக்தி கல்வி மையம் சொன்னது…

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

கக்கு, இந்த நடிகையோட பொண்ணு இந்தியாவுல இருக்காங்க, தெரியுமா?

பொன் மாலை பொழுது சொன்னது…

// தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..//

வருகைக்கு மிக்க நன்றி !* வேடந்தாங்கல் - கருன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அதாங்க மனிஷா கொய்லாரா! கமல் கூட ' எலிசபெத் டெயிலர் மகளா? ' னு பாட்டுப் படிப்பாரே? ( பெரியகண்டு பிடிப்பு! )

பொன் மாலை பொழுது சொன்னது…

//கக்கு, இந்த நடிகையோட பொண்ணு இந்தியாவுல இருக்காங்க, தெரியுமா?//

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

இரண்டு வெவ்வேறு கணவர்கள் மூலம் இரண்டு பெண்கள். பிறந்தது 1956 வாக்கில் .
ஆனால் அவர்கள் உனக்கு அம்மா வயதில் இப்போது இருப்பார்களே ஓட்ட வட??

என்ன???

பொன் மாலை பொழுது சொன்னது…

என்ன? ஒ. வ. நாராயணா.....சத்தமே காணோம்??:))))))

சேலம் தேவா சொன்னது…

//எட்டுமுறை திருமணம் செய்துகொண்டு வாழ்கையை வாழ்ந்து பார்த்தவர்//

இது வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி தெரியுதே..?! :)

பெயரில்லா சொன்னது…

எட்டுமுறை திருமணம் செய்துகொண்டு வாழ்கையை வாழ்ந்து பார்த்தவர்//
நல்லா வாழ்ந்தாங்க போங்க

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மாணீக்கத்துக்கு என்ன ஆச்சு..?ஹி ஹி நம்ம ரூட்ல வர்றாரு..?

சென்னை பித்தன் சொன்னது…

சஃபையரில் பார்த்த ‘கிளியோபாட்ரா’
இன்னும் மறக்கவில்லை!(வேறு சில துணைக் காரணங்கள் இருந்தாலும்!)

RVS சொன்னது…

எலிசபெத்து செத்து போயிட்டாரா? அச்சச்சோ.. பூனைக் கண்ணழகி அவங்க.. பகிர்வுக்கு நன்றி மாணிக்கம். ;-))

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Interesting.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
மாணீக்கத்துக்கு என்ன ஆச்சு..?ஹி ஹி நம்ம ரூட்ல வர்றாரு..?//

அதானே இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சிபி வாங்குற குண்டாந்தடி அடி எல்லாம் நீர் வாங்க முடியாது ஓகே ஓகே பப்ளிக் பப்ளிக்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பிறவியிலேயே மிக அழகாக இருந்தாலும் நம்ம ஊர் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி போல அநியாத்துக்கு மேக்கப்பு போட்டுகொள்வார்!//

எதோ சரோஜா பாட்டிக்கு நீங்களே மேக்கப் போட்டு விட்ட மாதிரி சொல்றீங்க.....
கலிஞர் கோச்சுக்க போறார்....

பனித்துளி சங்கர் சொன்னது…

நானும் அறிந்தேன் நண்பரே . வருத்தம் தரும் தகவல்தான் . உலகத்தில் அதிகமானவர்களுக்குத் தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர் . தகவலுக்கு நன்றி

Unknown சொன்னது…

என்னது..உங்கள் கனவுகன்னி மறைந்துவிட்டாரா...! ஆழ்ந்த அனுதாபங்கள்.
வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// என்னது..உங்கள் கனவுகன்னி மறைந்துவிட்டாரா...! ஆழ்ந்த அனுதாபங்கள்.//

வேலன்.

ஆமாம் இவருதான் பாத்தாரு.
சமயம் கெடச்சா என்னிய போட்டுத்தல்லுவதிலேயே குறியா இருங்க ரெண்டு பேரும்.
யார் யாரா? யூர்கனும் நீங்களும்தான் மாப்ஸ்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகை தந்த அணைத்து வாசகர்களுக்கும் நன்றி.

Unknown சொன்னது…

எலிசபெத் டைலருக்கு கண்கள் தான் நீலம் ஆனால் நம்மூரில் பல நடிகைகளுக்கு வாழ்க்கையே நீலமாகத்தானே இருக்கிறது.எலிசபெத் டைலரைப்பற்றி படித்திருகிறேனே தவிர படம் பார்த்ததில்லை.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக