பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், டிசம்பர் 16

புலி வருது புலி !

எல். டி. டி. இ .உயிர் பெற்று மீண்டும்  இந்தியா வந்து பிரதமரையும், தமிழக முதல்வரையும் மற்றும் ப. சிதம்பரம் இவர்களை எல்லாம் தாக்க திட்டமிட்டுள்ளதாம்  ஏன் சோனியாவை விட்டுவிட்டீர்கள் ? 

சத்தியமாக அந்த டெல்லி (பஞ்சாபி) காரர் ஒன்றுமே உங்களுக்குஅல்லது எங்களுக்கு ஏன்  யாருக்கும் எதுவும் செய்ததேயில்லை. அவரால் ஒன்றும் செய்ய இயலாது . இது தெரிந்தும் பாவம் ,அவரை ஏன் நீங்கள் கொல்லவேண்டும்?

அதை விட்டு இங்கே வந்தால் நிலைமை இன்னமும் கிளியர். நம்மவருக்கோ வயது ஆகிவிட்டது.இன்னைக்கோ நாளைக்கோ என்ற நிலை.இவர்தான் உங்களின் உற்ற நண்பர் நலம் விரும்பி ஆயிற்றே !  இந்த லட்சணத்தில் இவரையும் கொல்ல போகிறார்களாம். 

அதுசரி, அவர்கள் திடிரென்று எங்கிருந்து தோன்றினார்கள்? அவர்களைத்தான் முற்றிலும் அழித்து ஒழித்து விட்டதாக சிங்கள அரசிடமிருந்து சர்டிபிகேட் வாங்கி வைத்துள்ளீர்களே! 

உண்மையில் இந்த ஹிட் லிஸ்ட் யாரால் தயார்செய்யப்பட்டது என்றால் காங்கிரஸ்,C B I , மற்றும் உள்துறை அமைச்சகத்தின் வேலையே இது.
இன்னமும் கூட இவர்கள் கீழ்கண்டவற்றை செய்தால் நல்ல பலன் கள் கிடைக்கும்.

எல். டி. டி. இ. மற்றும் ஏதாவது ஒரு இந்து அமைப்புக்கு தொடர்பை உண்டாக்கி செய்திகள் போடுங்கள். திக் விஜய சிங் மற்றும் ஏ. ஆர். அந்துலே போன்ற காங்கிரஸ் பழம் பெரிச்சாலிகளை கொண்டு " பிரபாகரன் இந்தியா நாட்டு (தங்க) தலைவர்களை கொல்ல வருவதாக என்னிடம் சாவதற்கு முன்னால் போனில் சொன்னான் " என்று பத்திரிகைகளில் பேச வையுங்கள். பர்கா தத் மற்று வீர் சிங்கவி இவர்கள் மூலம் டி. வி. இல் இவைகளை பற்றி பேச விடுங்கள். 

வரிசை கட்டி வந்து நின்று தினமும் தாக்கும் முடை நாற்ற ஊழல் பட்டியல்கள்.ரெய்டுகள்,  மாதாமாதம் உயரும் எரிபொருள்கள் விலை, அதனால் மேலும் மேலும் உயரும் ஓட்டு மொத்த விலைவாசி உயர்வு. நிர்வாக  திறமைகள் சிறிதும் அற்ற மத்திய மாநில அரசுகள்,மேலும்  2 G Spectrum உண்டாக்கிய தாக்கத்திலிருந்து மக்களை திசை திருப்ப வேண்டும். அதுதான் காரணம். இவர்கள் மட்டும் பில்லியன் கணக்கில் கொல்லை அடித்து தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பார்கள். ஆனால் மாத மாதம் தவறாமல் பெற்றோலிய எரிபொருள்களின் விலையை உயர்த்திவிட்டு நம் போன்றவர்களை சாக அடிப்பார்கள். இப்போது இப்படி "புலி வருது " பூச்சாண்டி  காட்டுகிறார்கள். U P A அரசு என்பது ஒரு முற்றிலும் வீணாய்போன, தறுதலையான ஒன்று . நாட்டு மக்களை இன்னமும் முழு முட்டாள்களாகவே எண்ணிக்கொண்டு உள்ளது. 

எந்த ஒரு இந்தியனும் இவைகளை நம்ப போவதில்லை. 


வலையில் படித்த ஒரு ஜோக் :

லல்லு, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மூவரும் ஒரு விமானப்படை விமானத்தில் தூரம் பயனிகின்றனர். லல்லு தன் சட்டை பையிலிருந்து ஒரு புத்தம் புதிய நூறு ரூபாய் தாளை உருவி சொன்னார்.
 // நான் இந்த நூறு ரூபாயை வீழே வீசி எறியப்போகிறேன்.இதனை எடுத்துக்கொண்ட யாராவது மிக்க மகிழ்ச்சியாய் இருப்பார்கள் இல்லையா? //

லாலுவின் இந்த செய்கை ஜெயலலிதாவிற்கு எரிச்சலைத்தர, அவர் // அந்த நூறு ரூபாய் நோட்டு மட்டும் என்னுடையதாக இருந்திருந்தால் அதனை இரண்டாக கிழித்து இரண்டு ஐம்பது ரூபாய்களாக மாற்றி கீழே வீசுவேன். அதனால் இரண்டு பேர் சந்தோஷமாக இருப்பார்கள் அல்லவா? //

கருணாநிதிக்கோ இந்த இருவரின் பேச்சும் கடுபைக்கிளப்ப, அவர் சொன்னார்
 // அந்த நூறு ரூபாயை ஒரு ரூபாய்களாக மாற்றி கீழே வீசி நூறு பேர்களை மகிழ்ச்சியாக இருக்க வைப்பேன்//

இவர்களின் உரையாடல்களை கேட்டுக்கொண்டே கவனமாக தன் வேலையை பார்த்த விமானிக்கு பற்றிக்கொண்டு வந்தது.தாங்க முடியாமல் அவர் சொன்னார்
 // இப்ப உங்க மூன்று பேரையும் இங்கிருந்து கீழே வீசினால் நாட்டில் உள்ள நூறு கோடி மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் //



16 comments:

RVS சொன்னது…

மாணிக்கம். நாளுக்கு நாள் காரம் கூடுது.. சொத்து அவர்களுக்கு சுமை நமக்கு.. இதுதான் அவர்களின் பாலிசி.
ஜோக் சூப்பர். ;-)

பொன் மாலை பொழுது சொன்னது…

இதில் என்ன காரம் உள்ளது R V S ? நான் சும்மா போகிற போக்கில்தான் எழுதினேன். காரமாக எழுதி யாருக்கும் உரைக்கப்போவது இல்லை? பின்னர் ஏன்.
வருகைக்கு நன்றி :))

கோவி.கண்ணன் சொன்னது…

மழைகாலமாக இருப்பதால் பிரதமர், முதல்வர் வரும் வழியில் புளிய மரம் சாய்ந்து ஆபத்து நேரிடலாம்னு சொன்னாலும் ஏதோ நம்பலாம்

கஜேந்திரன் பெருமாள் சொன்னது…

இப்படி சொல்லி சொல்லியே 60000 பேர காலி பண்ணிடீங்க! அண்ணன் சீமானுக்கு பெருகிவரும் அதரவு மற்றும் வைகோவின் விடுதலைபுலிகளின் தடை நீக்க மனு போன்றவற்றை திசை திருப்பும் ஒரு கள்ள நாடகம். இன்னும் எத்தன நாளைக்குதாண்ட எங்கள ஏமாத்துவீங்க!!!

Unknown சொன்னது…

பெரியவங்க சொல்வாங்க ஆடு ரத்தம் சுன்ற வரைக்கும் ஆடுன்னு

இவனுங்களுக்கு எல்லாம் சுண்டிப்போயும் ஆட்டம் மட்டும் நிக்கலையே

பொன் மாலை பொழுது சொன்னது…

// மழைகாலமாக இருப்பதால் பிரதமர், முதல்வர் வரும் வழியில் புளிய மரம் சாய்ந்து ஆபத்து நேரிடலாம்னு சொன்னாலும் ஏதோ நம்பலாம் //
----------------------கோவி கண்ணன்

ஆமாம்? இவர்கள் எல்லாம் தரை வழியாகவா வருவார்கள்? தனி விமானம் ,எளிகாப்புடறு என்றல்லவா கேள்விப்பட்டோம்?

பொன் மாலை பொழுது சொன்னது…

// இன்னும எத்தனை நாளைக்குதாண்ட எங்கள ஏமாத்துவீங்க!//
------கஜேந்திர பெருமாள் சொன்னது.

எனக்கென்னவோ நிறைய நம்பிக்கை உள்ளது. இது தொடரும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//பெரியவங்க சொல்வாங்க ஆடு ரத்தம் சுன்ற வரைக்கும் ஆடுன்னு
இவனுங்களுக்கு எல்லாம் சுண்டிப்போயும் ஆட்டம் மட்டும் நிக்கலையே //

-----------------விக்கி உலகம் சொன்னது.
இந்த ஆடுகள் போனா அடுத்த ஆடுகள் வரும் .கவலை படாதீர்கள்.

Unknown சொன்னது…

2 ஜி மறைக்க புலிகளா, நல்லா நடத்துறாங்க நாடகம்,ஜோக் சூப்பர் சார்

சசிகுமார் சொன்னது…

ஜோக் காமெடியாக இருந்தாலும் உள்ள கருத்து உண்மை

யூர்கன் க்ருகியர் சொன்னது…

அய்யய்யய்ய ... பூசணிக்கா தெரியிது ...பூசணிக்கா தெரியிது...

GoodJob சொன்னது…

"புலி பசித்தாலும் புல்லை திண்காது".அது போல "புலி எப்போதும் கிழட்டு நரிகளை கொல்லாது"

பெயரில்லா சொன்னது…

சோறே எனக்கு தெரியலை...யூர்கனுக்கு பூசனிக்கா எங்கே தெரியுதுனு தெரியலையே....

வாழ்க வளமுடன்.
வேலன்.

புலிகுட்டி சொன்னது…

// இப்ப உங்க மூன்று பேரையும் இங்கிருந்து கீழே வீசினால் நாட்டில் உள்ள நூறு கோடி மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் // என்றைக்காவது அப்படி நடக்கும்னு நம்புகிறேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//// இப்ப உங்க மூன்று பேரையும் இங்கிருந்து கீழே வீசினால் நாட்டில் உள்ள நூறு கோடி மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் //
//
அதை உடனே செஞ்சா இன்னும் நல்லாயிருக்கும்....நாசமா போவ...

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.இன்று தான் இந்த பதிவு படித்தேன். புலிபோன்ற பயங்ரவாத இயக்கங்களை வைத்து தமிழ்நாட்டில் மக்களை கவர முடியும் நிலையில் இப்படியான செய்திகள் வெளியிடுவதில் தப்பில்லை. அல் கொய்தா மதத்தை வைத்து பயங்கரவாதம் செய்வது போல் புலிகள் இனத்தை சொல்லி பயங்கரவாதம் செய்பவர்கள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக