பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜூன் 22

அம்மா எனும் ஒரு சொல்!




இவைகள் எல்லாம் வெறும் சாதாரண படங்களாக தோன்றலாம். ஆனால் இவைகளுக்குப்பின்னால் இயங்கும் ஒருதாயின் கருணையை பாருங்கள்.









டாக்டர் சஷிகலா தேவனபள்ளி, துபாயில் தன கணவருடன் வசித்துவருகிறார்.தனது மருத்துவமனையை நடத்திவருபவர். அவர் கூறுவதை கேட்போமா?



" அவர்களை முதன்முதலில் நான் பார்க்கநேர்ந்தது துபாயில் உள்ள இந்திய கன்சலேட் அலுவலகத்தில். ஒரு வேலை உணவு கூட இன்றி, தங்க இடமின்றி,கையில் பணமின்றி கூட்டமாய் ஒருமித்து காத்துக்கிடந்தனர். இந்திய கன்சலேட் அலுவலகத்திற்கு என் சொந்த வேலையாக சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு அலுவலர் என்னிடம் வினவியது "தாங்கள் தெலுங்கில் பேசுவீர்களா?" தலையாட்டினேன் . தெலுங்கு எனது தாய் மொழி . இதற்கு முன்னரே இங்கு அமீரகத்தில் அரசாங்கத்தின் பொது மன்னிப்பு முறை செயல் பட ஆரம்பித்து இருந்தது. போதிய ஆவணங்கள் இல்லாத, சட்டவிரோதமாக குடியேறி அல்லது விசா காலம் முடிந்து அல்லது உரிய இடத்திலிருந்து பலவித காரணங்களால் தப்பி வெளியேறி வேறு இடங்களில் கூலி வேலை செய்து பின்னர் " ரெய்டு " போன்ற அரசின் நடவடிக்கைகளினால் பிடிபட்டுவோர் இங்கு ஆயிரகணக்கில் உண்டுதான். இவ்வாறு பிடிபட்டவர்களை அமீரக அரசு அந்தந்த நாட்டின் கன்சலேட் அலுவலரிடம் ஒப்படைக்கின்றனர். அவர்களின் இருந்த நிலையை பார்த்தால் புரிகிறது.



கூட்டத்தில் பாதிபேருக்கு மேல் நிற்கக்கூட திராணியற்ற நிலை.மிகவும் பலவீனமாக இருந்தனர். இவர்களின் உடனடித்தேவை வயிற்றுக்கு உணவும் தங்க இடமும்தான். என்னிடம் காட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து பிழைக்க துபாய் சென்ற படிப்பறிவற்ற அப்பாவிகள். உடனடியாக இருப்பிடம் திரும்பி அவர்களுக்கு உணவு சமைக்க ஆரம்பித்துவிட்டேன். பொது மன்னிப்பு சம்பிரதாயங்களுக்காக அவர்கள் அனைவரும் இங்குள்ள இந்தியன் உயர் நிலைப்பள்ளியின் வளாகத்தின் முன்னால் திரண்டு இருந்தனர். அவர்களிடம் கொண்டு சென்ற உணவு பொட்டலங்களை கொடுக்க ஆரம்பித்தேன். இது இப்படித்தான் ஆரம்பமானது. இன்றெல்லாம் ஒரு நாளைக்கு சுமார் 20 கிலோ அரிசியும், 5 கிலோ பருப்பு வகைகளும் இந்த 100 பேர்களுக்கு போதுமானதாக உள்ளது. சில நேரங்களில் பருப்பு வகைகளுடன் காய்கறி களையும் சேர்த்துக்கொள்வதுண்டு. சூர்யோதயத்திற்கு முன்னாலேய எழுந்து விடுவேன் . அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து, அவைகளை பார்சல்களாக கட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் வழக்கமாக கூடியிருக்கும் இடங்களான கராமா மற்றும் பர் துபாய் பார்க் போன்ற இடங்களுக்கு சென்று சாப்பிட கொடுக்கிறேன். அவர்களில் பலர் சிகிச்சைக்காக எங்கள் மருத்துவ மனயினை அணுகுகின்றனர் அவர்களும் உணவு பார்சல்களை பெற்றுசெல்கின்றனர். இரவு உணவிற்கான பார்சல்களை டாக்சியில் ஏற்றிக்கொண்டு சோனாபூர் என்ற இடத்தில் தங்கியுள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுசெல்வேன்.ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பார்சல்களை தந்துவிடுவேன். ஒன்று இரவு உணவிற்கும் மற்றது அடுத்த நாள் காலை வேலை உணவிற்குமாக இருக்கும்.



இந்தபணி இரவு 9 மணி வரைக்கும் நீடிக்கிறது. இக்காரியங்களுக்கு என்னுடன் உதவியாக இருப்பவர்கள் என் மருத்துவ மனையில் உள்ள ஊழியர்களும், சில தன்னார்வ நண்பர்களும்.மற்றும் பொது மன்னிப்பு ஏற்பாடுகள் முடிந்து தாய் நாடு திரும்ப காத்திருப்பவர்களும் அடங்குவார்கள். இப்படி வந்தவர்கள் நிறையப்பேர் தினக்கூலிகளாக வேலை செய்து அந்தவருவாயை சேமிப்பாக கருதி செலவிடாமல் ஆனால் சாப்பாடு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கும் தேவையான உணவினை சமைத்து வழங்குகிறேன். ஆரம்பத்தில் தெலுங்கு மொழி பேசும் தொழிலாளர்கள் என்று ஆரம்பித்தேன் இன்று இந்தியர்கள் மட்டுமின்றி பங்களா தேஷ் நாட்டவர்கள் நேபாளிகள் என்று விரிவடைந்துள்ளது. இவர்களில் வயதான, உடல்நலம் மிகவும் குன்றிய மற்றும் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய உள்ளனர். நிறைய பேருக்கு கவனிக்கப்படாத நீண்ட நாள்பட்ட புண்களும் உள்ளன.இவர்கள் எல்லோரும் கட்டிட கட்டுமான துறைகளில் வேலை செய்த கூலிகள். ஒரு இளைஞருக்கு வேளையின்போது கான்கிரீட் இரும்பு கம்பி கண்ணில் சொருகியத்தால் வலது கண் பார்வை பறிபோயுள்ளது. இது போன்ற நீண்ட நெடிய பாதிப்புகளால் மனநிலை பாதித்து திரிபவர்களும் இருக்கின்றனர். எங்காவது நடை பாதையின் ஓரங்களில் உறங்கும் இவர்கள் பிறரிடம் மிகவும் கோபமாக நடந்துகொள்ளும் சுபாவம் வந்தவர்களாக இருக்கின்றனர். இங்கு இவர்களுக்கு இனி வேலைக்கும் வழி இல்லை. இனி சொந்த நாடு திரும்பும் எண்ணமே இல்லாமல் இருக்கும் இவர்கள் சிகிசைக்காக மருத்துவ மனை வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமும் உணவும் தந்து பராமரித்து வருகிறேன். இவர்கள் தங்கள் நாடு திரும்ப வேண்டி அவர்களுக்கு தேவையான Out pass மற்றும் விமான டிக்கெட்டும் "ஸ்பான்சர் " செய்பவர்களை தயார்செய்து அந்த ஸ்பான்சர் உதவியுடன் நாடு திரும்ப ஏற்பாடு செய்கிறேன்.




சிலர் இங்கு மரணித்தும் விட அவர்களின் உடல்களை சொந்த நாட்டில் உள்ள அவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பும் வேலையும் நடைபெறுகிறது. வேலையின்றி, இருக்க இடமின்றி, உணவின்றி இவர்கள் துபாய் சோனாபூர் பகுதிகளில் அதிகம் உள்ளனர். கடுமையான குளிர் காலங்களில் இவர்கள் அட்டை பெட்டிகளை பிரித்து அவைகளை போர்வைகளாக போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் இவர்கள் எனது கார் சென்று அங்கு நின்ற வுடன் எழுந்து ஓடிவந்து காரை சூழ்ந்து கொள்வார்கள்.சிலர் உணவு பொட்டலங்களை பெற்றுக்கொள்வார்கள், சிலர் தங்கள் தாயகம் திரும்பும் நாள் எப்போது என அறிய முற்படுவார்கள். உரிய பாஸ்போர்ட் இல்லாமல் வேலைக்கு வைத்துக்கொண்ட கம்பெனிகளும் அபராதமாக பணம் கட்டவேண்டும் இங்கு. எனவே இதுபோன்ற கம்பெனி யை சார்த்த P R O போன்றவர்களிடம் இவர்கள் கணிசமான அபராத தொகை வேறு தர வேண்டும். தற்போது எங்களின் கடன்களும் அதிகமாகியுள்ளது.கிரெடிட் கார்ட் அதன் பில் தொகை, வாடகை,தண்ணீர், மின்சாரம் என எங்களின் கடன் சுமைகளும் அதிகரித்துவிட்டது. சில வேளைகளில் ஸ்பான்சர் செய்வதாக ஏற்றுக்கொண்டவர்கள் எதுவும் செய்வதில்லாமல் போகவே அது போன்ற நிலைமைகளிலும் நாங்களே அந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை.



துபாய் தவிர அபுதாபி,ஷார்ஜா ,அஜ்மான் போன்ற பிற அமீரகங்களுக்கும் சென்று அங்குள்ள குடியுரிமை இல்லாத கைதிகளுக்கும் உணவு கொண்டு சென்று தருகிறேன். சென்ற 2002 ஆம் வருடம் துபாய் வந்தேன் . கராமா மெடிகல் சென்டரில் டாக்டராக பணி புரிந்தேன். பின்னர் செந்தமாக ஒரு மருத்துவ மனை தொடங்கினேன். இரண்டு பிள்ளைகள் ஒரு மகளும் இந்தியாவில் படித்துக்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் என் பிள்ளைகள் கூட இந்த என் வேலைகளை விரும்பியதில்லை. ஆனால் தற்போது தங்கள் தாய் என்ன செய்கிறாள் என்பதை புரிந்துகொண்டுவிட்டனர். என் கணவருக்கு கூட இத செயல்களில் இஷ்டமில்லைதான். எங்களின் சேமிப்பு அனைத்தும் செலவாகிபோய்விடுகிறது என்பதால். இது இனி இன்னமும் எத்தனை நாளைக்கு எவ்வளவு தூரம் தொடரும் என்று தெரியவில்லை. ஆனால் என்னால் முடிந்த வரையில் இந்த பணியினை தொடர்ந்து செயதுவருவேன்."




மேற்கண்ட தொகுப்பு
Khaleej Times தினசரியில் இம்மாதம் சென்ற 12 ஆம் தேதி அன்று வெளியானது. அப்பத்திரிக்கை எடிட்டரிடமும் கட்டுரைஆசிரியரிடமும் அனுமதி பெற்று தமிழில்
( என்னால் முடிந்தவரை ) தர முயற்சித்துள்ளேன்.
அமீரக நண்பர்கள் இந்த செய்தியினை படித்திருக்கலாம். மற்ற தமிழ் அன்பர்களும் படிக்கவேண்டும் என்ற நினைத்து இதனையே என் முதல் பதிவாக ஆக்கி அந்த தாயுள்ளம் கொண்ட டாக்டர் சஷிகலா தேவனபள்ளி அவர்களுக்கு சமர்பிக்கின்றேன்.


CREDITS TO
THE EDITOR KHALEEJ TIMES, DUBAI, U.A.E.
THE AUTHOR JETHU ABRAHAM
MR.KIRANPRASAD FOR PHOTOGRAPHY.


18 comments:

டவுசர் பாண்டி சொன்னது…

கக்கு - அண்ணாத்தே !! மொதல் பதிவுலயே, கலக்கிட்டே போ !!
அப்பால, மனித நேயம்னா கிலோ இன்னா வேல இன்னு கேக்கற நம்ப அரசியலு வாதிங்க கீற இந்த நாட்டுல , இந்த அம்மா மேரி ஆளுங்களும் கீற தாள தான், இந்தா பெரி சுனாமி வந்த போதும்
நம்ப உலகம் உன்னும் அழியாம கீது, மெய்யாலுமே , இந்த அம்மா
உன்னொரு அன்னை தெரசா தான், வாழ்க அவரின் தொண்டு .அவுங்களுக்கு இந்த டவுசரோட ராயல் சல்யூட் நைனா !! ஜெய் ஹிந்த்.

இதுக்கு முடிஞ்ச உதவி செய்த என் நண்பர் கக்கு வுக்கு மன்சார வாழ்த்துக்கள் நைனா .
தொடரட்டும் உங்கள் தொண்டு.

டவுசர் பாண்டி சொன்னது…

வாஜாரே !! உன்னோட கர்த்து பொட்டில , கீற சொல் சரி பாக்கறத ரவ எட்து உடு நைனா !!
அப்போ தான் கர்த்து சொல்றவங்களுக்கு சொம்மா இஜீயா இருக்கும் . வர்ட்டா !!

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி டவுசர்அவர்களே ! எனக்கு தெரியும் நீங்க தான் முதலில் வருவீர்கள் என்று,
மேலும் பிளாக்கில் என்ன மாற்றங்கள் செய்யவேணும் என்று கூறுங்க. எப்படி செய்வதென்றும் சொல்லுங்க சாமீ.

மெயில் தனியாக அனுப்புகிறேன். நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

பாண்டி அண்ணாத்த கர்து பொட்டில கீற சொல்லு சரிபாக்கரத எட்து உட்டன் நைனா..
இப்டிதான் புச்சா வந்ட்கினவங்கலு சொல்லி கினு சரி பண்ணும் தல. ரொம்ப தேங்க்ஸ் பா....

Tech Shankar சொன்னது…

Great Boss.

படித்ததும் பட்டம் வாங்கி கிழித்ததும் கெமிஸ்ட்ரி. வேலையும்
அதுவாகப்போனத்தில் ஒரு திருப்த்தி -

Tech Shankar சொன்னது…

great human being boss. I salute.

பதி சொன்னது…

நல்ல பகிர்வு....

இதனை இங்கு அறியத் தந்ததிற்கு நன்றி....

ஸ்ரீ.... சொன்னது…

இம்மாதிரி மக்களால்தான் வெளிநாட்டிலும் நம்பிக்கையாக வாழமுடிகிறது. தாய்க்கு எனது வணக்கங்கள். கருத்துள்ள பதிவு.

ஸ்ரீ....

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகை தந்த திருவாளர்கள் தமிழ் நெஞ்சம் ,
பதி மற்றும்
ஸ்ரீ அனைவருக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகை தந்த சத்யா மற்றும் சிவா விற்கும் நன்றி

டவுசர் பாண்டி சொன்னது…

சொம்மா , அல்லேக் பண்ட்டே வாஜாறே !!
தூளு டக்கரு, போ !!!நெரி , மேட்டரு எழ்த இந்த டவுசரோட வாழ்த்துக்கள் !!!

கீப் இட்டு அப்பு . ( வேத்து பூட்ச்சிபா!! ரவ இங்கிலீசு பேச சொல்லியே )

அன்புடன் அருணா சொன்னது…

அருமையான சேவை...அருமையான பதிவு....பூங்கொத்து!

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அருணா

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மனத்தை நெகிழ்த்திய அருமையான சொற்சித்திரம்.வெளிநாடு வாழ் தமிழர்களான உங்களைப்போன்றவர்கள்தான் இந்தச் செய்திகளையெல்லாம்- இந்த அவலங்களையெல்லாம் வெளிக் கொணர முடியும்.வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலா

பொன் மாலை பொழுது சொன்னது…

மிக்க நன்றி மேடம்.
எழுத நிறைய ஆசைதான் ஆனால் வேலை பளு போன்ற இன்னும் பிற காரணிகளும் சில நேரங்களில் தடையாய் போய்விட மனமும் உடலும் அயர்சியாகி போய்விடுகிறது.
எனினும் தங்களைப்போன்றவர்களின் பாராட்டுதல்கள் ஊக்கம் தருவதாய் அமைவது மனதிற்கு இதமானது.
தங்களின் மேன்மையான வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.


தோழமையுடன்
கக்கு -மாணிக்கம்.

பெயரில்லா சொன்னது…

மனம் நெகிழ்கிறது. !!

- Juergen

MR.BOO சொன்னது…

Revealing and awesome Post Mr. Manickam… Congrats.

பொன் மாலை பொழுது சொன்னது…

Thank you for your visit Mr.Boo.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக